tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் காத்தாடி விற்பனை:  பெங்களுருவில் 3 பேர் கைது

சென்னை, நவ.26- இணையதளம் மூலம் சென்னையில், காத்தாடி விற்பனை செய்த மூன்று பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 6,500 காத்தாடிகள் மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்திய ரூ25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை, வியாசர்பாடி பகுதியில் கடந்த 17 ஆம் தேதியன்று மாஞ்சா நூல் அறுத்து சிறுவனும், ஜிலானி என்ற பெண்ணும் காயமடைந்தனர். காய மடைந்த சிறுவனுக்கு கழுத்தில் ஏழு தையல் போடப்பட்டது.

அதேபோல, ராயபுரம் தொப்பை தெருவை சேர்ந்த ஜிலானி பாஷா என்ற பெண் தன்னுடைய மாமியார் வீட்டிற்கு செல்வதற்காக வியாசர்பாடி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் அவருடைய கழுத்து மற்றும் கையில் அறுத்துள்ளது. உடனடியாக அரு கில் இருந்தவர்கள் காயமடைந்த ஜிலானி பாஷாவை சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனியார் பேருந்தில் தவறி விழுந்த மாணவன் பலி

கடலூர்,நவ.26-கடலூரில் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தார். 

கடலூரில் கனமழை பெய்து வருவதால் மஞ்சகுப்பம் அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் கைலாஷ் (16) தேவனாம்பட்டினத்திற்கு சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்தார். பேருந்தில் அதிக கூட்டம் இருந்துள்ளது. இதனால், படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கைலாஷ் கை தவறி கீழே விழுந்ததில் பேருந்தின் பின் சக்கரம் தலையில் ஏறியதில் உயிரிழந்தார். உடனடியாக மாணவனின் உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கூடைப்பந்து: ஆசிய கோப்பைக்கு இந்தியா தகுதி

சென்னை, நவ.26- இந்திய கூடைப்பந்து சங்கம் சார்பில் சர்வதேச அளவிலான போட்டி சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கில் நடைபெற்றது. தகுதிச் சுற்றில் கஜகஸ்தான் அணியை இந்தியா, 88-69 என்ற புள்ளிகள்  கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்து,  புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.சென்னை, நவ.26- இந்திய கூடைப்பந்து சங்கம் சார்பில் சர்வதேச அளவிலான போட்டி சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கில் நடைபெற்றது. தகுதிச் சுற்றில் கஜகஸ்தான் அணியை இந்தியா, 88-69 என்ற புள்ளிகள்  கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்து,  புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.z