tamilnadu

img

மினி உலகக்கோப்பை கிரிக்கெட் - 2025

3 நாட்கள் விடுமுறை பார்மை இழக்கச் செய்யும்

கிரிக்கெட் உலகில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும்) நடைபெற்று வருகிறது.  தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஞாயிறன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. அரையிறுதி ஆட்டங்கள் புதன்கிழமை அன்று நிறைவு பெற்றது. ஆனால் அடுத்த 3 நாட்களுக்குப் பின் தான் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 3 நாட்கள் இடைவெளி என்பது வீரர்களின் பார்ம் பிரச்சனையை கடுமையாக பாதிக்கும். அதாவது இன்னும் 3 நாட்கள் உள்ளதே என வீரர்கள் உணவுப் பழக்கத்தை மாற்றுவார்கள் ; பயிற்சியை தள்ளிப்போடு வார்கள்; கடின பயிற்சியை புறந்தள்ளி சனியன்று பார்த்துக்  கொள்ளலாம் என்ற அலட்சியமான மனநிலையை அடைய வாய்ப்புள்ளது.  இதனால் இறுதிப்போட்டிக்கான 3 நாட்கள் இடைவெளி வீரர்களின் பார்மை இழக்கச் செய்யும் என்பது குறிப்பிடத் தக்கது.

பாவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

6 முறை ஒருநாள் உலகக் கோப்பை, ஒரு முறை டி-20 உல கக்கோப்பை, 2 முறை மினி உல கக்கோப்பை வென்று கிரிக்கெட் உலகில், அதிகளவில் உலகக்கோப்பை யை கைப்பற்றிய நாடு என்ற சாதனையை நீண்ட காலமாக தன்வசம் வைத்துள்ள ஆஸ்திரேலியா அணி, 9ஆவது சீசன் மினி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் படு தோல்வி அடைந்து வெளியேறியது. ஆஸ்திரேலிய அணியின் இந்த தோல்விக்கு அந்த அணி ஆட்டத்திறன் ஒரு காரணம்  என்பதை விட, மற்றொரு காரணம் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இல்லாமல் அந்த அணி களமிறங்கி யது தான் மிக மிக  முக்கிய மான காரணமாக அமைந்தது.  பேட்டிங்கில் மிக பலமாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஜூனி யர் பந்துவீச்சாளர்களுடன் (ஆடம் ஜம்பாவை தவிர) களமிறங்கியது. அதா வது ஸ்டார்க், கம்மின்ஸ், மிட்சல் மார்ஷ் (ஆல்ரவுண்டர்), ஸ்டோய்னிஸ், ஹாசில்வுட் உள்ளிட்ட முக்கிய நட்சத்திர வீரர்கள் வெளிப்படையாக எவ்வித காரணத்தையும் கூறாமல் மினி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்காமல் விலகினர். இதனால் ஆஸ்திரேலிய அணி துவார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், கூப்பர், ஆடம் ஜம்பா உள்ளிட்ட வீரர்களின் பந்துவீச்சை வைத்து மட்டுமே  சமாளித்தது.

காப்பாற்றிய மழை

முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா, கடைசி 2 லீக் ஆட்டங்களில் மழை காரணமாக விளையாடாமலேயே அதிர்ஷ்ட வாய்ப்புடன் அரையிறுதிக்கு முன்னேறியது. மழை இல்லாவிட்டால் ஆஸ்திரேலிய அணியின் நிலைமை மோசமாகி இருக்கும். லீக் போட்டி யில் வெளியேறும் நிலை கூட ஏற்பட்டு இருக்கலாம். ஆனாலும் அரையிறுதி யில் அசூர பலத்தில் களமிறங்கிய இந்திய அணியை ஆஸ்திரேலியா வால் சமாளிக்க முடியவில்லை. வெறுங்கை யோடு வெளியேறியது ஆஸ்திரேலியா. ஸ்டார்க், கம்மின்ஸ், மிட்சல் மார்ஷ் (ஆல்ரவுண்டர்), ஸ்டோய்னிஸ், ஹாசில் வுட் ஆகியோருடன் ஆஸ்திரேலியா களமிறங்கி இருந்தால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் அளவிற்கு முன் னேறி இருக்கும். ஆனால் முக்கிய  வீரர்கள் விலகலால் தான் ஆஸ்திரே லியா அரையிறுதியுடன் வெளியேறி யது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவன் ஸ்மித் ஓய்வு

கம்மின்ஸ் விலகல் காரணமாக மினி உல கக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட ஸ்மித், அரை யிறுதி தோல்வி காரணமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவ தாக அறிவித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  35 வயதான ஸ்மித் ஆஸ்திரேலிய அணிக்காக 170  ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,800 ரன்கள் குவித்துள்ளார். இதில் 12 சதம், 35 அரைசதங்களும் அடங்கும். அதேபோல பந்துவீச்சில் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இளம் வீரர்களுக்காக...  ஓய்வு குறித்து ஸ்டீவன் ஸ்மித் கூறுகை யில், “இது ஒரு நீண்ட பயணம். நான் ஒவ்வொரு நிமிடத்தையும் நேசிக்கிறேன். இந்த அற்புதமான பயணத்தில் பல நினைவுகள் இருக்கின்றன.  பல அற்புதமான சக வீரர்களுடன் 2 உலகக் கோப்பைகளை வென்றது அருமையாக இருந்தது. 2027ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு அணியில் பல இளம் வீரர்கள் தயாராக இருக்கின்றனர். அதனால் ஓய்வுபெறுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.