tamilnadu

img

28 கூடுதல் எஸ்.பி.க்கள் நியமனம்

சென்னை:
தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 28 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை  போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார். மேலும் 13 பேர் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக தமிழக காவல்துறையில் ஏற்கனவே தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவு தற்போது கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் 3 எஸ்.பி.க்கள்  பதவி வகிக்கிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்பிரிவில் தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், நகரங்களிலுமாக 41 கூடுதல் எஸ்.பி.க்கள் மற்றும் கூடுதல் துணை ஆணையர்கள் புதியதாக பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதில் 28 பேர் தற்போது பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் வியாழனன்று இரவு பிறப்பித்தார்.இந்த 28 பேரும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றியவர்கள் ஆவர். மீதமுள்ள 13 இடங்களுக்கு விரைவில் கூடுதல் எஸ்.பி.க்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;