சென்னை, ஆக. 29 -2025 பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் வழங்கு வதற்காக 1.77 கோடி சேலை, 1.77 கோடி வேட்டிகளை உற்பத்தி செய்யவும் அரசா ணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயனாளி களுக்கு வேட்டி, சேலை கிடைப்பதை விரல் ரேகை பதிவு மூலம் உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடு விற்குள் உற்பத்தி செய்து வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகளைக் கண்காணிக்க வருவாய் துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது.