மத்திய அரசு கொண்டுவந்துள்ள 2017 சாலை போக்குவரத்து சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நல்லூர் சுங்கச்சாவடி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.அமரேசன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், செயலாளர் எஸ்.செல்வராஜ், நிர்வாகிகள் பி.நடேசன், ஏ.நடராஜன், சுப்பிரமணி உட்பட பலர் கலந்துகொண்டனர். அதேபோல், திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் கரிமுல்லா, ஜெயவேல் உட்பட பலர் பேசினர்.