tamilnadu

img

9 வயதில் 200க்கும் மேற்பட்ட சாதனை

சென்னை, நவ. 16- புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக் காலில் உள்ள இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ். மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமிஇயக்குனர் வி.ஆர்.எஸ். குமாரிடம் மூன்று வயது முதல்  கராத்தே, சிலம்பம், யோகா, கிக் பாக்ஸிங், குபுடோ,தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகளை கற்று வருகின்றனர். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி  உலகிலேயே இரட்டையர்கள் முதன்முத லாக 9 வயதுக்குள் கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வ தேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி  உலக சாதனை படைத்து புதுச்சேரி ஆளு நர், முதல்வர் மற்றும் பல்வேறு தரப்பினரிட மும்பாராட்டு மற்றும் பல்வேறு விருது களைப் பெற்ற காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் 5ஆம் வகுப்பு பயிலும்  இரட்டையர்களான கே.ஸ்ரீவிசாகன் (9) மற்றும்  கே ஸ்ரீஹரிணி (9). இவர்களை சிறப்பிக்கும் வகையில் நாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் பிறைசூடன் சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கி பாராட்டினார்.