tamilnadu

விதிகளை மீறிய 20 சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்

சென்னை, ஜூலை 31- மாநிலங்களவையில் கவனஈர்ப்பு விவாதத்தில் திமுக எம்.பி. வில்சன் பேசினார்.  அப்போது, “தமிழ்நாட்டில் 65 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் நடைமுறைகளுக்கு மாறாக 5 சுங்கச்சாவடிகள் மாநகராட்சி, நகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ தூரத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 60 கி.மீ. குறைந்த இடைவெளி யில் இரண்டு சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட  கூடாது என்கிற வரம்பும் உள்ளது. இந்த வரம்பை மீறி 20 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற சுங்கச்சாவடிகளை அகற்ற ஏற்கனவே ஒன்றிய அரசு உறுதி அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை”என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சென்னை-திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் சுங்கச்சாவடி யில் ரூ. 28.54 கோடிக்கு மேல் வசூலிக்கப் பட்டுள்ளது. முழு கட்டணம் வசூலிக்கப்படாமல் 40 விழுக்காடு கட்டணத்தை குறைக்க சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இங்கு இந்த கட்டணத்தை குறைக்கும் நடை முறை பின்பற்றப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

சுங்கச்சாவடிகளில் செய்யப்படும் முதலீடுகள், வசூலிக்கப்பட்ட தொகை ஆகிய வை பகுப்பாய்வு செய்ய ஒரு சுதந்திரமான அமைப்பு தேவை. அல்லது புதிய வாகனத்தை பதிவு செய்யும் போது ‘ஒரு முறை’ கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்து, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.