திருவண்ணாமலை,ஆக.23- திருவண்ணாமலை கல்நகர் பகுதி மக்கள் கடந்த 20 நாட்களாக குடிப்பற்கு குடிநீர் வழங்கப்படாததால், தாகத்துடன் தவித்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை கல் நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வரு கின்றனர். இதில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித் மக்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். கடந்த இருபது நாட்களுக்கு மேலாக இப் பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லை. குடிநீர் வழங்கக் கோரி, நகராட்சி அலுவல கத்தில் பலமுறை புகார் அளித்தும், இது சம்பந்தமாக அதிகாரிகள் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்னர். எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக குடிநீர்ப் பிரச்சனையை சரி செய்து, குடிநீர் வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.