ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
சென்னை, ஆக 4- தமிழகத்தில் முக்கியப் பொறுப்பு களில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள னர்.
அதன்படி, ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகேஷ் குமார் ரத்தோட், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராகவும், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில் குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜி-யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி நெல்லை சரக டிஐஜியாகவும் மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமாரும், மேற்கு மண்டல ஐஜியாக இருந்த புவனிசுவாய், காவலர் தலைமையிட ஐஜியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று நெல்லை மேயர் தேர்தல்
திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன்
நெல்லை, ஆக. 4- நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம். சரவணனுக்கும், கவுன் சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஜூலை 8ஆம் தேதியன்று தனது பதவி யை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் திங்கட்கிழமை (ஆக. 5) நடைபெறுகிறது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளா ட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை யில் நடைபெற்ற திமுக கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குப் பின், திமுகவின் மேயர் வேட்பாளராக- மக்களால் 3 முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட- கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப் பட்டுள்ளார். அவர், போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சத்ரு சம்ஹார யாகம் நடத்திய அன்புமணி
தராசுத் தட்டில் தடுமாறி விழுந்தார்
ஆடிஅமாவாசை யை யொட்டி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சவுமியாவுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு செய்தார். தனது எடைக்கு ஏற்ப, அரிசியை துலாபாரமும் கொடுத்தார். இந்த துலாபா ரத்தின் போது, அன்புமணி ராமதாஸ் தரா சுத் தட்டில் உட்காரும் போது, தடுமாறி கீழே சாய்ந்தார். பின்னர் அருகில் இருந்த வர் உதவியுடன் சுதாரித்து உட்கார்ந்தார். கோவிலில் மூலவர், சண்முகர், குருபக வான் சன்னதியில் வழிபட்ட அன்புமணி ராம தாஸ், சத்ரு சம்ஹார யாகமும்நடத்தினார்.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கடிதத்தில் கொலை மிரட்டல்
சென்னை, ஆக. 4- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் அவ ரது வீட்டின் முன்பு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 18 பேர் வரை கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர். இவர்களில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்
இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு சதீஷ் என்பவரின் பெயரில் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு வரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், ஆம்ஸ்ட்ராங் மனைவி, உறவினர்கள் வசிக்கும் அயனா வரம் அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ் விவகாரம்
இளையராஜா தரப்பு மறுப்பு
சென்னை, ஆக. 4 - மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாடலைப் பயன்படுத்தியது தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இப்பிரச்சனை தற்போது முடித்து வைக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின. இளையராஜா தரப்பில் ரூ. 2 கோடி இழப்பீடு கேட்கப்பட்டதாகவும், தயா ரிப்பாளர் தரப்பில் இருந்து ரூ. 60 லட்சம் கொடுக்கப்பட்டு இந்த பிரச்ச னை முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட் டது. ஆனால், இதுகுறித்து இளைய ராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் இந்த தகவலை மறுத்துள்ளதாகவும், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இளைய ராஜாவுக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பற்றி அவதூறு; பாஜக வடசென்னை நிர்வாகி கைது!
சென்னை, ஆக. 4 -சென்னை, ஆக. 4 - பாஜக சார்பில் நடை பெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் முத லமைச்சர் மு.க. ஸ்டாலி னை அவதூறாக பேசியதற்காகவும், காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததற்காகவும் பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து சில அவ தூறு கருத்துக்களை பேசிய கபிலன், கூட்டம் முடியும் தரு வாயில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் ஜெக தீஷனிடம், தகராறு செய்த தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாசர்பாடியில் உள்ள கபிலன் வீட்டிற்கு நேரில் சென்று அவரை கைது செய்தனர்.