தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கம் சிதம்பரம் கோட்ட கிளை சார்பில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் மற்றும் மதநல்லிணக்க மக்கள் ஒற்றுமை சிறப்புக் கருத்தரங்கம் வட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் காசிநாதன், மாவட்டச் செயலாளர் பழனி, துணைத்தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அரசு பள்ளியில் 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.