tamilnadu

சென்னையில் 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

சென்னை, செப்.9-  தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால் தட்பவெப்ப சூழ்நிலை மாறி வருகிறது. தென்மேற்கு பருவ மழை நிறைவு பெறும் நிலையில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கிறது. இந்நிலையில் கொசுக்கள் உற்பத்தி அதி கரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்த சுகாதா ரத்துறை தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டு வரு கிறது. சென்னையில் டெங்கு கொசுக்களை ஒழிக்க சுகா தாரத்துறை தடுப்பு நட வடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைகளில் டெங்கு காய்ச்ச லுக்கு தனி வார்டு தொட ங்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட 66 பேரில், 6 பேருக்கு டெங்கு ‘பாசிட்டிவ்’ இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களுக்கு அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே போல ஸ்டான்லி அரசு மருத்துவனையில்  44 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்ப ட்டுள்ளது. இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி கூறுகை யில், “காய்ச்சல் பாதிக்க ப்பட்டவர்கள் 24 மணி நேரமும் சிகிச்சை பெற  அதற்கான பிரிவு தொடங்க ப்பட்டுள்ளது. மருத்துவர்கள் இரவு பகலாக சுழற்சி முறை யில் பணியில் ஈடுபடு கிறார்கள். டெங்கு பாதிக்க ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. தட்டணுக்கள் உடலில் எவ்வளவு இருக்கி றது என்பதை 3 நிமிடத்தில் கண்டு பிடித்து விடலாம். தேவையான அளவு ரத்தம் இருப்பு உள்ளது. 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளன. எனவே காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு வர வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது” என்றார்.