சென்னை, ஜூன் 23- சென்னை தீவுத்திடலில் நிரந்தர கண்காட்சிக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய நகரமாக சென்னை திகழ்கிறது. இங்கு உட்கட்ட மைப்பு வசதிகள், பொது போக்கு வரத்து உள்ளிட்டவைகள் மேம்படுத் தப்பட்டு வருகின்றன. இவை மட்டு மல்லாமல் புதிய வளர்ச்சித் திட்ட பணிகளையும் கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகரின் தேவைக்கு ஏற்றவாறு புதிய திட்டங்களை உரு வாக்க வேண்டியுள்ளது. சென்னை மாநகருக்கு தேவையான இத்தகைய வளர்ச்சி திட்டங்களை சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் படிப்படி யாக செயல்படுத்தி வருகிறது. சென்னை தீவுத்திடலில் ஆண்டு தோறும், அரசு சார்பில் குறிப்பிட்ட நாட்களில் பொருட்காட்சி நடத்தப்படு வது வழக்கம். சென்னை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக தீவுத்திடல் பொருட்காட்சி திகழ்கிறது.
சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், விளை யாட்டுகள், பல வகையான உணவு கள், கேளிக்கை அம்சங்கள் என ஒரே இடத்தில் அனைத்தையும் காண முடியும். இந்நிலையில் சென்னை தீவுத்திட லில் பொழுதுபோக்கு மையம் ரூ. 50 கோடியில் அமைக்கப்படும் என 2023 - 24ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக் கப்பட்டிருந்தது. இதற்காக தீவுத் திடலில் 30 ஏக்கர் நிலத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டது. தீவுத் திடலுக்கான புதிய திட்டம் தயாரிக்கப் பட்டது.
ரூ. 50 கோடி நிதி அறிவிக்கப் பட்ட நிலையில், தற்போது திட்டத்தின் மதிப்பீடு ரூ.104 கோடியாக அதிகரித் துள்ளது. தீவுத்திடலில் அதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வ தற்கு, ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தகவல் தெரி வித்துள்ளனர். இங்கு நிரந்தர கண்காட்சி வளாகம், கடைகள் அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒது க்கப்பட்டுள்ளது. 400 கடைகள் கட்டப்பட உள்ளன. மேலும் சிப்பி வடி வில் நிரந்தர கண்காட்சிக் கூடம் கட்டப் பட உள்ளது.