தஞ்சாவூர்/திருச்சிராப்பள்ளி/புதுக்கோட்டை, ஜூன் 9- தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப்-IV) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் அன்னை வேளாங் கண்ணி கலை அறிவியல் கல்லூரி மற்றும் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி ஆகிய மையங்களில், ஒருங் கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வை யிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 223 தேர்வு மையங்களில் மொத்தம் 51,904 பேர் தேர்வு எழுதினர். 65,521 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், பல்வேறு காரணங் களால் 13,617 பேர் தேர்வு எழுத வர வில்லை. இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் உடனிருந்தார்.
திருச்சியில் 65 ஆயிரம் பேர் எழுதினர்
திருச்சி மாவட்டத்தில் 301 தேர்வு மையங்களில், 83,465 பேர் விண்ணப் பித்திருந்த நிலையில், 65,350 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 18,64 பேர் எழுத வரவில்லை.
திருச்சியில் உள்ள, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மொத்தம் 1,200 மாண வர்கள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதை யடுத்து தேர்வர்கள் காலையிலே பெரும் திரளாக வளாக நுழைவா யிலில் கூடினர்.
அதற்கடுத்து அவர்கள் எந்த கட்டிடத்தில் தேர்வு எழுதச் செல்ல வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. அண்ணா பல்கலை வளாகத்திற்கு தொடர்பில்லாத தேர் வர்கள், அங்கு சரியான வழிகாட்டு தல் இல்லாததால், தட்டு தடுமாறி தங்களது தேர்வு எழுதும் அறைக்குச் சென்றடைந்தனர். காலை, 9 மணிக்கு பிறகு வந்த தேர்வர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை.
இதனால் தஞ்சாவூர், புதுக் கோட்டை, திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து தேர்வெ ழுத வந்திருந்த, 20-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத முடியாமல், ஏமாற்றத் துடன் திரும்பினர்.
இந்நிலையில், குருப் 4 தேர்வு நடைபெறும் மையத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
புதுக்கோட்டையில் 36,333 பேர் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 36,333 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை ஆய்வு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவிக்கையில், “புதுக் கோட்டை இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுக் கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை மௌண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் தொகுதி-4 பதவிக்கான தேர்வு நடைபெற்றது.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத் தில் அமைக்கப்பட்டுள்ள 166 தேர்வு மையங்களில் 36,333 பேர் தேர்வை எழுதினர். இதில் 9,022 பேர் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வு நிகழ்வு கள் 177 வீடியோகிராபர்கள் மூலமாக கண்காணித்து தேர்வு நடைமுறை கள் வீடியோ பதிவு செய்யப்பட்டன” என்றார்.
ஆய்வுகளின்போது, புதுக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உட னிருந்தனர்.