கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தை கண்டித்து செங்கல்பட்டு பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவர் மரணத்திற்கு நீதி கேட்டும், உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.