tamilnadu

img

இந்நாள் செப்டம்பர் 29 இதற்கு முன்னால்

1940 - நடுவானில் இரு விமானங்கள் மோதி, ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கொண்டு, பாது காப்பாகத் தரையிறங்கிய வினோத நிகழ்வு, ஆஸ்திரேலி யாவின் ப்ராக்கெல்ஸ்பி என்ற இடத்தில் நிகழ்ந்தது.  இரண்டாம் உலகப்போரின்போது, பேரரசு வான் பயிற்சித் திட்டம் அல்லது பிரிட்டிஷ் காமன்வெல்த் வான் பயிற்சித் திட்டம்  என்ற பெயரில் இங்கிலாந்து, கனடா, ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில், விமானிகளுக்குப் பயிற்சியளிக்கும் பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்சிலுள்ள ஃபாரஸ்ட் ஹில் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பயிற்சிப் பள்ளியிலிருந்து, இரண்டு ஆவ்ரோ ஆன்சன் வகை விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. ஓரிடத்தில் சாய்வாகத் திரும்பியபோது, தனக்குக் கீழே மற்றொரு விமானம் இருப்பது, மேலே இருந்த விமானிக்குத் தெரியாத தால், இரண்டும் மோதிக்கொண்டன. இதில், மேலே இருந்த விமானத்தின் சுழல் விசிறிகள்(ப்ரெப்பெல்லர்) சேதமுற்று, அதன் இரு என்ஜின்களும் செயலிழந்துவிட்டன. சுழல் விசிறிகள் கீழ் விமானத்தின் உடற்பகுதிக்குள் சென்றதில், அதன் விமானிக்கு முதுகுப் பகுதியில் அடிபட்டுவிட்டது. கீழ் விமானத்தின் சில பாகங்கள் மேல் விமானத்தில் செருகிக் கொள்ள, உப்புமூட்டை ஏறியதுபோல இரண்டும் மாட்டிக் கொண்டன.

ஆனால், மேல் விமானத்தின்  திருப்புதல் உள் ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் செயல்பட்டன. இதைத் தொடர்ந்து, இரு விமானங்களிலுமிருந்த மற்ற மூவரையும் பாராசூட் மூலம் குதித்துத் தப்பிக்கச்செய்த மேல் விமா னத்து விமானி ஃபுல்லர், வட்டமடித்தவாறே தரையிறக்கு வதற்கான இடத்தைத்தேடி, 8 கி.மீ. தொலைவில் ஒரு குதிரை லாயத் திடலைக் கண்டுபிடித்து, தரையிறங்கும் சக்கரங்கள் இயங்காதபோது கடைப்பிடிக்கும் அவசர கால முறையைப் பயன்படுத்திப் பாதுகாப்பாகத் தரை யிறங்கினார். இரு விமானங்களும் சரிசெய்யப்பட்டு, மேல் விமானம் மீண்டும் பறக்கும் பணிக்கும், கீழ் விமானம் மாண வர்களுக்குக் காட்சி விமானமாகவும் மாற்றப்பட்டன. காய முற்றிருந்த கீழ் விமானத்தின் விமானி, குணமாகி மீண்டும் பணியில் சேர்ந்து, இரண்டாண்டுகளுக்குப்பின் மற்றொரு விமான விபத்தில் பலியானார். சிறப்பாகத் தரையிறங்கி யதற்காக, பாராட்டுகளையும், பதவி உயர்வையும் பெற்ற மேல் விமானத்தின் விமானி ஃபுல்லர், உரிய அனுமதி பெறா மல் ஊடகங்களிடம் இந்நிகழ்வு குறித்து விவரித்ததற்காக தண்டனையும் பெற்றார். அடுத்தடுத்து பதவி உயர்வுகள் பெற்று விமானப்படையில் உயர் பதவிக்கும் வந்த ஃபுல்லர், 1944இல் மிதிவண்டியில் செல்லும்போது, பேருந்து மோதி உயிரிழந்தார்!

- அறிவுக்கடல்