tamilnadu

img

இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கும் குழு

சிட்னி
சீனா மற்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்க்கு தடுப்பூசியை உருவாக்கும் குழுவை இந்திய வம்சாவளி விஞ்ஞானி வழி நடத்துகிறார்.  சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 635 பேர்பலியாகியுள்ளனர். மொத்தம் 30,840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான  குழு  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி ஒன்றைஉருவாக்க ஆய்வகத்தில் வைரஸின் முதல் தொகுப்பை உருவாக்கியுள்ளது. ரத்தம் உள்ளிட்ட மனித மாதிரிகளில் இருந்து புதிய கொரோனா வைரஸை தனியே பிரித்தெடுப்பதில் ஆஸ்திரேலியாவின் டோஹர்ட்டி இன்ஸ்ட்டியூட்  கடந்த வாரம் வெற்றிபெற்றது.  இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உயர்பாதுகாப்பு வளையத்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்ஐஆர்ஓ முதல் கட்ட வெற்றி கண்டுள்ளது.பிட்ஸ் பிலானி மற்றும் பெங்களூரு ஐஐஎஸ்சியில் உயர்கல்வி படித்த  எஸ்.எஸ்.வாசன், டெங்கு, சிக்குன் குன்யாமற்றும் ஜிகா வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் பங்கெடுத்தவர் ஆவார்.

;