கார் பந்தயத்தில் வரலாற்றில் முதல் முறையாக சவுதி அரேபியாவை சேர்ந்த ரீமா ஜுஃபாலி எனும் பெண் பங்குபெற்றுள்ளார்.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. முகம், உடல் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணிதல், கார் ஓட்டத் தடை, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்க்கத் தடை, சினிமா பார்க்கத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தன. பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்ட நிலையில், சவுதி அரேபியாவை சேர்ந்த 27 வயதான ரீமா ஜுஃபாலி, ’ஜாகுவார் ஐ பேஸ்’ கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். இதை அடுத்து, ரீமாவுக்கு சவுதி இளவரசர்கள் உட்பட பல்வேறு தரப்புகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.