tamilnadu

சுற்றுலாப் பயணிகளுக்காக அனந்தபுரி தர்ஷன் டூர்

தலைநகரத்திற்கு வரும் சுற்றுலா ப்பயணிகளுக்காக அனந்தபுரி பஸ் டூர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் நகரத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான பத்மநாப சுவாமி திருக்கோயில், குதிரை மாளிகை, மிருகக்காட்சி சாலை, ப்ளானட்டோரியம், கோவளம் கடற்கரை, வேளி, சங்குமுகம் கடற்கரை ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்க்கும் ஏற்பாட்டுடன் அனந்தபுரி தர்ஷன் டூர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையின்கீழ் இயங்கும் திருவனந்தபுரம் மாவட்டச் சுற்றுலா முன்னேற்றக் கவுன்சில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் திட்டங்களை உருவாக்கிவருகிறது. திரிவேணி சங்கமம் என்ற பெயரில் கன்னியாகுமரிக்கு அழைத்துச் செல்லும் பயணத்துடன் பொன்முடி, மீன்முடி ஃபாரஸ்ட் ட்ரையல், நெய்யாறு எல்பென்ட் ஸஃபாரி ஆகியவையும் இந்த டூர் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 24 பேர் அமரக்கூடிய நவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட டி.ட்டி.பி.ஸி. பேருந்து இதற்காகப் புதிதாகக் களமிறக்கப்பட்டுள்ளது. சிட்டி டூர் மட்டுமல்லாமல் முன்பதிவு செய்பவர்க ளுக்கு குறைந்த கட்டணத்தில் இந்தப் பேருந்து வாடகைக்கும் விடப்படும். மேலும் விபரங்களுக்கு 7594949402 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.

;