tamilnadu

ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் நலவாரிய உறுப்பினர்கள்

சிவகங்கை, மே 16- கடந்த எட்டு மாதமாக அமைப்புசாரா நல வாரிய உறுப்பினர்களுக்கு ஒய்வூதியம் வழங்கப்படவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செய லாளர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அமைப்பு சாரா நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிறைவு பெற்ற பின் மாதம் ரூ.1000 பென்ஷன் பெற்று வந்த தொழிலாளர்களுக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக பென்ஷன் வழங்கவில்லை.  அவர்கள் பென்ஷன் பணத் தின் மூலம் தான் வாழ்க்கை நடத்தி வரு கிறார்கள். கொரோனா ஊரடங்கள் இவர்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுககவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.