tamilnadu

தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

கழிவு பொருளிலிருந்து கலைப்பொருட்கள் உருவாக்கும் போட்டி

தூத்துக்குடி, ஜூன் 9- தூத்துக்குடி மாவட்டத்தில் கழிவு பொருட்களில் இருந்து கலைப்பொருட்களை உருவாக்கும் போட்டி நடை பெறுகிறது. தேர்வு செய்யப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு உலக சுற்றுச்சூழல் தினவிழாவில் பரிசு கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரி வித்துள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் உலக சுற்றுச்சூழல் தினவிழா விரைவில் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து விழா பேருரையாற்ற உள்ளார். இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டில் உள்ள கழிவு பொருட்களை கொண்டு கலைநயமிக்க பொருட்களை உருவாக்கிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு கல்லூரி மற்றும் பள்ளி அளவில் போட்டி நடத்தப்பட உள்ளது. பள்ளி அளவில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவ -மாணவிகளுக்கு முதல் மூன்று பரிசுகளும் கல்லூரி அளவில் முதல் மூன்று மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும் பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. அளவில் முதல் மூன்று மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் என மூன்று பிரிவு களாக 9 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.  பள்ளி கல்லூரி மாணவ -மாணவிகள் தாங்கள் வீட்டி லேயே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்யும் வகையில் கலைப் பொருட்களாக உருவாக்கி அதனை ஜூன் 12ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கிற்கு எடுத்து வரவேண்டும். அங்கு தேர்வு குழுவினர் மூலம் சிறந்த மறுசுழற்சி கலைப்பொருள் தேர்வு செய்யப்பட்டு அமைச்சர்கள் பங்கேற்கும் உலக சுற்றுச் சூழல் தினவிழாவில் பரிசுகள் வழங்கப்படும். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரிய வகை கடல் வாழ்  உயிரினங்களை பாதுகாக்க கோரிக்கை  

தஞ்சாவூர், ஜூன் 9- தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உலக பெருங்கடல் தின விழா சனிக் கிழமை மாலை நடை பெற்றது. மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்கு நர் சிவக்குமார் பேசினார். கடலோரக் காவல்துறை உதவி ஆய்வாளர் மனோ கரன், தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செய லாளர் ஏ.தாஜூதீன், நம் வாழ்வார் மக்கள் இயக்க மாநிலச் செயலாளர் சண்முக சுந்தரம், பேரழிவுக்கு எதி ரான பேரியக்க ஒருங்கி ணைப்பாளர் லெனின், ஐபேட் நிறுவன அலுவ லர்கள் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர். மீன்துறை ஆய்வாளர் கெங் கேஸ்வரி நன்றி கூறினார்.  நிகழ்ச்சியில், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் பசு, கடல் குதிரை, டால் பின் மற்றும் பவளப் பாறை களை பாதுகாக்க வேண்டும். கடலுக்குள் சட்டவிரோத செயல்கள், அன்னியர் நட மாட்டம் குறித்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.

பண்ணைக் குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகள் பயன் பெற ஆட்சியர் அழைப்பு

தூத்துக்குடி, ஜூன் 9- தூத்துக்குடி மாவட்டத்தில் வேளா ண்மைப் பொறியியல் துறை மூலம் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள் ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் காவேரி டெல்டா மற்றும் கடற்கரை மாவட்டங்களில், விவசாய நிலப்பகுதிகளில் மழைநீரை சேமித்து பயிருக்குத் தேவையான காலத்தில் பாசன நீரைப் பயன்படுத்தும் வகையில் இரண் டாம் கட்டமாக புதிதாக 8,202 எண்கள் பண்ணைக்குட்டைகள் ரூ.82.02 கோடி மதிப்பில் அமைக்க அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலப்பகுதிகளில் கிடைக்கப்பெறும் மழைநீரை பண்ணைக் குட்டைகள் அமைத்து சேமிப்பதன் மூலம் பயிருக்குத் தேவையான காலங்களில் பாசனம் செய்யப் பயன்படுத்த முடியும். அதே சமயம் அந்தப்பகுதியில் நிலத்தடி நீர் செறிவூட்டப்பெற்று நிலத்தடிநீர் மட்டம் காக்கப்படுவதோடு கடல்நீர் உட்புகாவண்ணம் நிலத்தடி நீரின் பண்பும் காக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக 2018-19 நிதி யாண்டில் 139 பண்ணைக்குட்டைகள் ரூ. 134.77 லட்சம் மதிப்பில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அமைக்கப் பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட் சம் மதிப்பில் 520 பண்ணைக்குட்டைகள் ரூ.520.00 லட்சம் மதிப்பில் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் வரைபடம், கம்ப்யூட்டர் பட்டா ஆகிய விவ ரங்களுடன் தங்கள் வட்டாரத்திற்கு உரிய கீழ்கண்ட அலுவலகங்களில் விண்ணப் பித்து பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் அணுக வேண்டிய முக வரி மற்றும் தொலைபேசி எண்: 1. விளாத்திகுளம், புதூர், கோவில் பட்டி, கயத்தார் மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டார விவசாயிகள்: உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியி யல் துறை, 27H, எட்டையபுரம் ரோடு பிர தான சாலை, கனரா வங்கி பின்புறம், கோவில்பட்டி -04632 234280 2. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார விவசாயிகள்: உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 4/122 A1, ஸ்டேட் பாங்க் காலனி வடக்கு, ஆறுமுகச்சாமி காலனி அருகில், தூத்துக்குடி-0461 2347280 3. திருச்செந்தூர், சாத்தான்கும், உடன்குடி மற்றும் ஆழ்வார் திருநகரி வட்டார விவசாயிகள்: உதவி செயற் பொறி யாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 65/10சி முத்து மாலை அம்மன் கோவில் தெரு, திருச்செந்தூர்- 04639 245280.