தோழர் பி.வி.முருகையன் மறைவு தலைவர்கள் அஞ்சலி
மன்னார்குடி, செப்.23- சிபிஎம் முத்துப்பேட்டை ஒன்றியக்குழு உறுப்பினரும் விதொச ஒன்றிய செயலாளருமான தோழர் பி.வி.கனகசுந்த ரத்தின் மூத்த சகோதரர் பி.வி.முருகையன் காலமானார். அவருக்கு வயது 70, சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று காலமானார். தோழர் பி.வி.முருகையனுக்கு இரண்டு மகன்களும் மக ளும் மனைவியும் உள்ளனர். திங்கட்கிழமை நண்பகல் அவரது சொந்த ஊரான முத்துப்பேட்டை ஜாம்பவனோடையில் நடைபெற்ற பி.வி. முருகையனின் இறுதி நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தமிழ்மணி, அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கே. பாலசுப்பிரமணியன், சிபிஐ ஒன்றிய செய லாளர் கே. முருகையன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் ஒன்றிய செயலாளர் ஏ.சூசைமாணிக்கம். தமுஎகச பொருளாளர் பி.ஆறுமுகம் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி.செல்லதுரை, என்.தனவேந்தன், எல்.டி. வீரசேகரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டை நகர மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் ஊர் பொது மக்கள் இறுதி நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் பெற ஓராண்டாக அலையும் பெண்
தஞ்சாவூர், செப்.23- தஞ்சையில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், மாற்றுத் திறனாளிக்கான ஸ்கூட்டர் பெற மனு கொடுத்து விட்டு, ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் ஓராண்டாக அலைந்து வருகிறார். தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வருபவர் கார்த்தி, கூலி தொழிலாளி, இவரது மனைவி குமுதா(29). இவர்களுக்கு அகிலாண் டேஸ்வரி(4), சரவணன்(2) என இரண்டு குழந்தைகள் உள்ள னர். குமுதா பிறவியிலேயே கால் வலுவிழந்து, நடக்க முடி யாமல் உள்ளார். இப்போது 3 சக்கர சைக்கிளை பயன் படுத்தி வருகிறார். இவர், மாற்றுத்திறனாளிக்கான ஸ்கூட்டர் வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரிகளிடம் 3 முறை மனு அளித்துள்ளார். ஆனால் ஓராண்டாகியும் மனு விற்கான எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்க வில்லை. இதையடுத்து திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் ஆ.அண்ணாதுரையிடம் மீண்டும் 4-வது முறையாக ஸ்கூட்டர் கேட்டு குடும்பத்துடன் வந்து மனு அளித்தார். இது குறித்து குமுதா கூறியதாவது: மாற்றுத்திற னாளிக்கான ஸ்கூட்டர் கேட்டு கடந்த ஒரு ஆண்டில் 3 முறை மனு அளித்து விட்டேன். இது நான்காவது முறை. தற்போது நான் மாற்றுத் திறனாளிக்கான சைக்கிளில் சென்று வருகிறேன். மாற்றுத் திறனாளி என்பதால் பேருந்தில் கூட ஏற்றி செல்ல மறுத்து விடுகிறார்கள். இப்படி இருக்க வீட்டிலிருந்து கடைக்கு சென்று காய்கறி கள் வாங்க கூட யாரையாவது எதிர்பார்த்து காத்திருக்க வேண்டி நிலை உள்ளது. மேலும் எனது வீட்டிலிருந்து ஆட்சி யர் அலுவலகம் 3 கி.மீ தூரம் இருக்கும் நிலையில் ஒவ்வொரு முறையும் மனுக் கொடுக்க வரும் போதும் எனது கணவர், என்னை சைக்கிளில் வைத்து தள்ளிக் கொண்டே வருவார். ஆனால் அதிகாரிகள் பல கார ணங்களை சொல்லி தட்டிக் கழித்து வருகிறார்கள். விரைந்து ஸ்கூட்டர் வழங்க வேண்டும் என்றார்.
இந்திய மாணவர் சங்க மாநாடு
தஞ்சாவூர், செப்.23- தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி இந்திய மாணவர் சங்கம் சார்பாக, கிளை மாநாடு நடை பெற்றது. மாநாட்டிற்கு விடுதிச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமை வகித்தார். முன்னாள் கிளைத் தலைவர் ஜி. பிடல்காஸ்ட்ரோ கிளை மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சாவூர் மாநகர செய லாளர் பி.அருண் குமார் கிளை மாநாட்டை வாழ்த்திப் பேசி னார். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி நிறைவுரையாற்றினார். நிறைவாக துணைத் தலைவர் எஸ்.விக்கி நன்றி கூறினார். மாநாட்டில் கிளைத்தலைவராக பி.வீரமுத்து, செய லாளராக ஆர்.சக்திவேல், துணைத் தலைவர்களாக ஆர்.ஐயப்பன், ஜி.கபிலன் துணை செயலாளர்களாக எஸ்.விக்கி, கே.சூர்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அரசாணை 145ஐ ரத்து செய்ய ஜாக்டோ- ஜியோ வலியுறுத்தல்
நாகப்பட்டினம், செப்.23- நாகை மாவட்ட ஜாக்டோ - ஜியோ போராட்ட ஆலோ சனைக் கூட்டம் நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்கக் கட்டி டத்தில், சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.டி.அன்பழகன், பா.ரவி ஆகியோர் தலைமை வகித்தனர். ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு முடிவின்படி, மாண வர், ஆசிரியர் நலன் மற்றும் சமூக நீதிக்கு எதிரான தேசியக் கல்விக் கொள்கை 2019-ஐ ரத்துசெய்ய வேண்டும், தொடக் கக்கல்வித் துறையைச் சீரழிக்கின்ற அரசு ஆணை எண் 145-ஐ ரத்து செய்ய வேண்டும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை 20 கிலோமீட்டருக்குள் உள்ள பள்ளிகளோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும், ஜாக்டோ - ஜியோ தலைவர் மு.சுப்பிரமணியனை, ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம், ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரி யருமான மா.ரவிச்சந்திரனின் தற்காலிகப் பணிநீக்கம் ஆகியவற்றை ரத்துசெய்ய வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ம் தேதி நாகைவுரித்திட லில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளிப் பள்ளி ஆசிரி யர் கூட்டணித் தலைவர்கள் என்.எழிலரசன், செந்தில் குமார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணித் தலை வர்கள் ப.பார்த்தசாரதி, வடிவழகன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத் தலைவர்கள் ரமேஷ், முருகன், செந்தில் வேலவன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் து.இளவரசன், புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் ப.அந்துன் சேரல் ஆகியோர் பங்கேற்றனர்.
மனைகள் குலுக்கல் மூலம் விற்பனை
திருச்சிராப்பள்ளி, செப்.23- திருச்சி மாவட்ட வீட்டு வசதிப் பிரிவு, நவல்பட்டு பகுதி-1 மற்றும் பகுதி -2, வாளவந்தான் கோட்டை திட்டப் பகுதியில் விற்பனையாகாமல் உள்ள மனைகளை குலுக்கல் மூலம் விற்பனை செய்ய பொது மக்க ளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு, வருகிற 25ம் தேதி குலுக்கல் ஒதுக்கீடு குழு கூட்டம் திருச்சி காஜாமலைக் காலனி மாந கராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது என தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திருச்சி மாவட்ட செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.