பள்ளி, சந்தையை மாற்றுவதை எதிர்த்த சிபிஎம் மாவட்ட நிர்வாகி தண்டியப்பன் கைது
சிவகங்கை, ஆக.4- சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் வாரச்சந்தை நடந்து வந்த பகுதி யை ஊரணியாக மாற்றுவது தொடர் பாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டி யப்பன் கைது செய்யப்பட்டார். திருப்புவனம் பேருராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊரணியிருப்ப தாக சொல்லப்படுகிற பகுதியில்தான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நூலகம் உள்ளது.1600 மாணவிகள் படிக்கிற மக ளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.இதன் அருகே தனியர் பள்ளி உள்ளது.இப்பகு தியில்தான் தினசரி சந்தை நடந்து வந்தது.வாரச்சந்தை உள்ள பகுதி அரசு சொத்தாக உறுதி செய்வதற்கு பல இடையூறுகள் இருந்தன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த அரசு சொத்தை பேருந்து நிலையத்திற்கு பயன்படுத்த கோரி பெரும் போராட்டம் நடத்தியது.இதில் துப்பாக்கிசூடு,தடியடி கடந்த காலத்தில் நடந்தது.மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன் பெயரில் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அரசு சொத்து என்று உறுதி செய்யப்பட்டது. இதன் பின்பே சந்தை நடந்து வந் தது.இந்த சந்தையை அகற்றிவிட்டு இங்கு ஊரணி அமைக்க பணிகள் நடந்துவருகிறது.இச் செயல் சரி யானதல்ல என்பதால் தண்டியப்பன் நியாயம் கேட்டுள்ளார்.இதன்காரண மாக தண்டியப்பனை கைது செய்து திருப்புவனம் காவல்நிலையத்தில் வைத்திருந்தனர்.தண்டியப்பன் கைது செய்ததை திருப்புவனம் பாஜக கட்சி யினர் வெடிபோட்டு கொண்டாடியுள்ள னர்.இம்முடிவு எடுக்கும் முன்பு அனைத்துக்கட்சியினர் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்று தண்டி யப்பன் கூறினார். கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி கூறும்போது,திருப்புவனம் நலனுக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு போராடுகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் தண்டியப்பனை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கி றேன்.திருப்புவனத்தில் பேருந்து நிலையம் கிடையாது.திருப்பு வனத்திற்கு பேருந்து நிலையத்திற்கு இந்த இடத்தை முடிவு செய்யும்போது பெரும் போராட்டம் நடந்தது.வாரச் சந்தை நடைபெற்றுவருகிற இடம் பேரூ ராட்சிக்குட்பட்ட அரசு நிலம் என்பதை உறுதி செய்ய சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி கொண்டவர் தண்டி யப்பன்.இன்று திடீரென இந்த இடத்தை ஊரணியாக மாற்றப்போகி றோம் என ஊரணியாக ஆழப்படுத்து வது சரியல்ல.வன்மையாக கண்டிக் கத்தக்கது.வாரச்சந்தையாக நடை பெறும் இடத்தை ஒன்று பேருந்து நிலை யமாக மாற்ற வேண்டும்.அல்லது சந்தையாக தொடர வேண்டும்.1600 மாணவிகள் படிக்கிற மாணவி களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் .அதுமட்டுமல்ல மேலும் ஒரு தனி யார் பள்ளிக்கூடம் உள்ளது.மக்கள் நலன் கருதி ஊரணியாக மாற்றுவதை நிறுத்த வேண்டும். திருப்புவனம் காவல்நிலை யத்திற்கு சென்று தண்டியப்பனை, மாவட்ட செயலாளர் கே.வீரபாண்டி, ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், ராமகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைச் செயலாளர் பூமிநாதன் ,நகர் செயலாளர் ஈஸ்வரன்,ஆறுமுகம் மற்றும் தோழர்கள் பார்த்தனர். இதன்பின்னர் கைது செய்யப்பட்ட தண்டியப்பனை காவல்துறையினர் விடுதலை செய்தனர்.
விண்ணுக்கு செல்லும் விதைகள்: மாணவர்கள் முயற்சி
கோவை, ஆக.4- ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு சார்பில் வரும் ஆக.11 ஆம் தேதி சென்னையில் விண்ணை நோக்கி ராட்சதபலூன் அனுப்பும் நிகழ்வு நடைபெற உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 65 ஆயிரம் முதல் 1 லட்சத்து 35 ஆயிரம்அடி வரை செல்லும் பலூன், அடுத்த 4 மணி நேரத்தில் தரையிறக்கப்படுகிறது. இந்த பலூனில் புவியில் உபயோகிக்கும் பொருட்களை வைத்து அனுப்பி அவை கதிர்வீச்சுகளால் பாதிக்கப்படுகிறதா? என்று சோதனை செய்யப்படுகிறது. தமிழக அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 10 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் கோவை மசக்காளிபாளை யம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள னர். இதுகுறித்து பள்ளி தலைமை யாசிரியர் மைதிலி கூறியதாவது, எங்கள் பள்ளி மாணவர்கள் விதை களை ராட்சத பலூனில் விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதற்காக தக்காளி, நெல், மிளகாய் மற்றும் சூரியகாந்தி விதைகள் வாங்கப்பட்டுள்ளன. இவைகளை கதிர்வீச்சு பாதிக்காத வகையிலும், கதிர்வீச்சால் பாதிக்கும் வகையிலும் பலூனில் வைக்க உள்ளனர். பலூன் கீழே வந்ததும் அந்த விதைகளை மண்ணில் விதைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மான், முயல் வேட்டையாடிய 2 பேர் கைது
கோவை, ஆக. 4- கோவை பெரிய நாயக்கன்பாளையம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி மான் மற்றும் முயல்களை வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். பெரிய நாயக்கன்பாளை யம் வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி சத்தம் கேட்பதாக அந்தப் பகுதி மக்கள்வனத்துறை யினருக்கு தகவல் அளித்த னர். இதனையடுத்து, வனத்துறையினர் விரைந்து சென்றனர். அப்போது, நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களுடன் இரண்டு பேர் வனத்துறையினரை கண்டவுடன் தப்பியோட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர் அவர்க ளிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களை மீட்டனர். பின்னர், அவர்களி டம் விசாரணை செய்த போது, கோவை கவுண்டம்பாளையம் ஆர்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ரஞ்சித்குமார், திம்மம்பாளையம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பாலுதுரை என்பவரின் மகன் ஜீந்தா என தெரியவந்தது. அவர்கள் வனப்பகுதியில் மான் மற்றும் முயல்களை வேட்டையாட வந்தததாக தெரிவித்தனர்.