தஞ்சாவூர், ஜூலை 17– தஞ்சை அருகே கள்ளப்பெரம் பூர் ஏரியை தூர்வார, கடந்த 3 ஆண்டுகளாக அதிகாரிகள் அனு மதி தர மறுத்து வந்த நிலையில், கிராம மக்கள் போராடி, தற்போது அனுமதி பெற்று ஏரியை தூர்வா ரத் தொடங்கியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப் பெரம்பூர் கிராமத்தில் உள்ள ஏரி சோழர்கள் காலத்தில் வெட்டப்பட் டது. புதுக்கோட்டை மாவட்டம், கந் தர்வக்கோட்டையில் பொழியும் மழை நீரானது, சிவப்பு நிற மண லில் ஓடி வந்து சேருமிடம் தான், இன்று கள்ளப்பெரம்பூர் ஏரியாக அழைக்கப்படும் பழமையான செங்கழுநீர் ஏரி. இந்த ஏரி, 642 ஏக்கர் பரப்பள வில், எட்டு மதகுகளையும், இரண்டு வெள்ள நீர் வடிகால்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம், 2,662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கள்ளப்பெரம்பூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சீராளூர், சக்கரசாமந்தம், ராயந்ா தூர், வடகால், சித்தரக்குடி ஆகிய கிராமங்களுக்கு இந்த ஏரி தண்ணீர் செல்கிறது. மேலும் கல்லணையில் பிரிந்து வரும் வெண்ணாறு, கச்சமங்கலம் அணையில் இருந்து, ஆனந்த காவிரி வாய்க்கால் வழியாக வழிந் தோடி வருவது மற்றொரு முக்கிய மான நீராதாரம். கள்ளபெரம்பூர் ஏரியின் மொத்த கொள்ளளவு, 0.5 டி.எம்.சி., ஆகும். இதை முறையாக தேக்கி னால், இரண்டு போகம் விவசாயம் செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த, 2007ல், தி.மு.க., ஆட்சி காலத்தில், இந்த ஏரியை தூர்வார, 5.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணி கள் நடைபெறாமல் முடங்கி போனது. தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு ‘செங்கழுநீர் ஏரி சீரமைப்பு’ என்ற பெயரில், பாசன வசதி பெறும், கிராம மக்களும், நிதி திரட்டி, தூர்வாரும் பணிகளை தொடங்க நினைத்து 8 லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டி பணியை துவங்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர். ஆளுங்கட்சியினர் அதிகாரிகள் மூலம் முட்டுக்கட்டை போட்டதால் கடந்த 3 ஆண்டாக தொடர்ந்து கிராம மக்கள், இளைஞர்கள் போராடி, கடந்த வாரம் அனுமதி பெற்று புதன்கிழமை தூர்வாரும் பணியை துவங்கினர்.