திருவாரூர் மாவட்ட முன்னோடி தலைவர் பி.எஸ்.தனுஷ்கோடி.இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி கச்சனம் நால்ரோடு வி.எம்.கே.பாரதி திருமண மண்டபத்தில் 9-ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, நாகை மாலி, ஐ.வி.நாகராஜன், ஜி.சுந்தரமூர்த்தி, வி.தொ.ச மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.