சென்னை, ஜூன் 6-பாட்டி, தாத்தாக்கள்தங்களது பேரக்குழந்தைகள் மற்றும் மற்ற குழந்தைகளுக்கு நன்னெறி கதைகளையும் நல்ல பழக்கங்களையும் கதைகள் மூலமாக சொல்லித்தருவது காலம் காலமாக நடைபெறுகிறது. இருந்தாலும் இந்த பரபரப்பான நவீன நகர வாழ்வில் இது மறைந்து வருகிறது. கூட்டு குடும்ப முறை சிதைந்து வருவதால் தாத்தாக்களும் பாட்டிகளும் தனித்து விடப்பட்டுள்ளனர். இருப்பினும் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அல பசயனேஅயவயடநள இலவச வலைதளத்தைதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் வியாழனன்று (ஜூன் 6) தொடங்கிவைத்தார்.வீடியோ வடிவத்திலோ அல்லது ஆடியோ வடிவத்திலோ பாட்டி கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீமதி தற்போது வளர்ந்து வரும் தலைமுறையினர் சமுகத்தில் நல்ல மனிதர்களாக உருவாக இதுபோன்ற கதைகள் பயன்படும் என்றார். ஹார்ட் புல்னெஸ் மெடிடேஷன் மையத்துடன் இணைந்து இதனை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். நாம்அனைவரும் பாட்டி கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள். அதை இன்றைய தலைமுறையினருக்கு மறக்காமல்கொண்டு செல்லும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது என்று ஆளுநர் குறிப்பிட்டார்.