ஈரோடு, ஜூன் 3-ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை, 13 நாட்களுக்கு சணல் பொருட்கள் தயாரிக்க இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. ஈரோடு, கரூர் நெடுஞ்சாலை, கொல்லம்பாளையம் பேருந்து நிறுத்தம், ஆஸ்ரம் மெட்ரிக்குலேஷன் உயர்நிலை பள்ளி வளாகம், இரண்டாம் தளத்தில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி பெற விரும்புவோர் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 முதல், 45 வயது வரை உள்ளவர் பங்கேற்கலாம். ஞாயிறு தவிர மற்ற நாட்களில் தினமும் 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியாளர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பயிற்சியில் கலந்து கொள்ள முன்னுரிமை வழங்கப்படும். மேலும் 0424 2400338 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்கள் அறியலாம் என கனரா வங்கியின் முதுநிலைமேலாளர் கே.சுதர்சன் தெரிவித்துள்ளார்.