tamilnadu

img

இடிந்து விழுந்த அரசு பள்ளியின் மேல்தளக் கூரை

சிதம்பரம், ஜூலை 15- கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்  கோயில் அருகே  குமராட்சி  ஒன்றியத்திற்கு  உட்பட்ட தில்லை நாயகபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது.  இங்கு 14க்கும் மேற்பட்ட மாண வர்கள் படிக்கின்றனர். திங்கட் கிழமை காலை மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு சற்றுமுன் பள்ளியின் வராண்டா பகுதியின் மேல்தளக் கூரை பெயர்ந்து விழுந்  தது.  மாணவர்கள் யாரும் அப்போது  பள்ளிக்கு வராததால் விபத்து ஏதும்  ஏற்படவில்லை. கூரை பெயர்ந்து விழுந்திருப்ப தைக் கண்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீதமுள்ள பகுதி எப்பொழுது விழுமோ என்ற அச்சத்திலேயே மாணவர்கள் வராண்டா பகுதியை தாண்டிச் செல்கின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரி கள் பள்ளியை ஆய்வு செய்து பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். மேலும் வெளியாட்கள் உள்ளே வராதவாறு பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க வேண்டும், மாண வர்களின் சேர்க்கையை அதிகப்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.