சென்னை, செப். 13 - நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் 5 ஆண்டு ஒப்பந்த அடிப் படையில் தனியாருக்கு கொடுத்து வருகிறது. இம் முறையை கைவிட்டு நெடுஞ் சாலைத் துறை மூலமே சாலை பராமரிப்பு பணிகளை மேற் கொள்ள வலியுறுத்தி வெள்ளி யன்று (செப்.13) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை திறன்மிகு உதவியாளர் கள் (சாலை ஆய்வாளர்கள்) சங் கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திறன்மிகு உதவி யாளர்களை நிரந்தர அரசு ஊழி யர் பணியிட வரிசையில் சேர்ப்ப தோடு, பயணப்படி வழங்க வேண் டும், இளநிலை வரை தொழில் அலுவலர் (ஜேடிஓ) பதவி உயர்வை விரைந்து அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப் பட்டன. இப்போராட்டத்திற்கு சங் கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வி. ஏகநாதன் தலைமை தாங்கி னார். கவுரவ பொதுச் செயலா ளர் எம். மாரிமுத்து, பொதுச் செயலாளர் சி.குருசாமி, பொரு ளாளர் அ. ராஜமுனியாண்டி உள் ளிட்டோர் பேசினர்.