tamilnadu

img

இந்திய தொழிலை காப்பாற்றாத போலி தேசியவாதிகள் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் சாடல்

கோவை, செப்.15-  இந்திய தொழிலை காப்பாற்றாத மோடி, நிர்மலா சீதாராமன் தேசியவாதிகள் கிடையாது. போலி தேசியவாதிகள். இவர்களிடம் இருந்து தேசத்தை தொழிலை பாதுகாக்க முன்னிற்போம் என்று அ.சவுந்தரரா சன் சூளுரைத்தார். கோவையில் நடைபெற்ற தொழில் பாதுகாப்பு மாநாட்டில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில்,“மோட்டார் வாகன உற்பத்தி அனைத்து தொழில்களை யும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கி றது. நடைபாதை வியாபாரத்தில் துவங்கி அனைத்து விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது. திடீரென இது நடக்கவில்லை. பல ஆண்டுக ளாக அதிகரித்த வண்ணம் இருந்த மக்களின் வாங்கும் திறன் குறைக்கப்ப ட்டதே இதற்கு காரணம். வாங்குவ தற்கு மக்களிடம் பணம் இல்லை. மக்கள் கையில் இருந்து சந்தைக்கு வரவேண்டிய பணம் ஆட்சியாளர்க ளால் களவாடப்பட்டுள்ளது” என்றார்.

கட்டணக் கொள்ளை

மோட்டார் வாகனம் வாங்குகிற ஒவ்வொருவரும் ஆயுட்கால வரி செலுத்துகின்றனர். தரமான சாலை அமைக்க வாங்கிய வரிப் பணத்தை செலவு செய்யாமல் மீண்டும் சுங்கச்சாவடி அமைத்து வரி என பிடுங்குகிறார்கள். இதன் காரணமாக 22  ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கும் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு மட்டும் ரூ. 250 கோடி செலவாகிறது. ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நமது மக்களின் சந்தைக்கு வர வேண்டிய பணம் சுங்கச்சாவடி யில் பறிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

வேலையிழப்பு...
கடந்த 2 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் பேர் ஐடி துறையில் வேலை இழந்து உள்ளனர். இவர்கள்தான் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனத்தை வாங்குபவர்கள். இவர்க ளின் வேலையை பறித்துவிட்டால் உற்பத்தி செய்யப்பட்ட வாகனத்தை யார் வாங்குவார்கள்? உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை எங்கு விற்பது? இங்குதான் விற்க முடியும் எனவும் சவுந்தரராசன் தெரிவித்தார். சிறுகுறு தொழில்களை பாதுகாக்க வேண்டும். பட்டாசு, கைத்தறி, முந்திரி பதப்படுத்துவது,  தீப்பெட்டி, ஜவுளி உள்ளிட்ட பாரம்பரிய தொழில்களை பாது காப்பதன் மூலமே இந்த நெருக்கடியை எதிர் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசு நிதி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் பாது காக்கப்பட வேண்டும். இன்னும் பல நிறுவனங்களை அரசு கைப்பற்ற வேண்டும். நமது தேசபக்த போராட்ட மும் இதுவாகத்தான் இருக்கும். தேசியம் என்றால் நாட்டின் தொழிலை காப்பாற்றப்படுவதுதான். நமது உற்பத்தி சுதேசிய இந்திய தேசியம். இந்திய தொழிலை காப்பாற்றாத மோடி, நிர்மலா சீதாராமன் போன்றோர் தேசியவாதிகள் கிடையாது. போலி தேசியவாதிகள். இவர்களிடம் இருந்து தேசத்தை தொழிலை பாதுகாக்க முன்னிற்போம் என்றும் அ.சவுந்தரராசன் கூறினார். முன்னதாக, இம்மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கே.மனோகரன் நன்றி கூறினார்.

விடியவே இல்லை: ஜி.ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “செங்கொடி இயக்கம் என்றால் தொழிலாளிக்கான போனஸ், கூலி உயர்வுக்காக மட்டும் போராடு பவர்கள் என்கிற புரிதல் உள்ளது. ஆனால், தொழில் அமைப்பை வலுப்படுத்தவும், தொழில் வளர்ச்சிக்காகவும் போராடுவோம் என்பதை சிஐடியு நடத்துகிற இம்மாநாடு உணர்த்தியுள்ளது. இது இன்று மட்டுமல்ல, எப்போதும் செங்கொடி இயக்கம் தொழில் வளர்ச்சிக்காக போராடி வருகிற அமைப்பாகும்” என்றார்.

செங்கொடியின் பெருமை...
இம்மாவட்டத்தில் செங்கொடி இயக்கத் தலைவர்களாக இருந்த கே.ரமணி, பூபதி, பி.ராமமூர்த்தி, ஆர். உமாநாத் போன்ற தலைவர்கள் தொழிலை பாதுகாக்க குரல் கொடுத்தவர்கள்தான். 1948 ஆம் ஆண்டு தொழில் வளர்ச்சிக்கு மின்சக்தி அவசியம் என்பதை உணர்ந்து நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை அடையாளம் காட்டியது செங்கொடி இயக்கம். நவரத்தின நிறுவனமாக இந்த பொதுத்துறை நிலைப்பதற்கு பாதுகாப்பதற்கு நின்றது செங்கொடி இயக்கத்தின் பெருமை. அந்த பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார்.

பரிதாப நிலைமை...

கோவை மாவட்டம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டமாகும்.  பம்ப் உற்பத்தியில் 45 விழுக்காடு கோவையாகும். பஞ்சாலை ஸ்பின்டல் 30 விழுக்காடு, ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் 20 விழுக்காடு இங்கு உற்பத்தியாகிறது. சிறு-குறு நிறுவனங்கள் 50 ஆயிரத்திற்கும் மேல் உள்ள இம்மாவட்டத்தில் பல லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இன்று ஒட்டு மொத்த தொழிலும் மிக பரிதாபமான நிலையில் உள்ளதையும் எடுத்துரைத்தார். 2017 ஆம் ஆண்டு நள்ளிரவில் ஜிஎஸ்டி குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி, இது இரண்டாவது  சுதந்திரம் என தம்பட்டம் அடித்தார். ஆனால், இன்னும் விடியவே இல்லை என்பது நிதர்சனமாக உள்ளது. ஜிஎஸ்டி வரியால் 30 விழுக்காடு தொழில்கள் மூடப்பட்டுள்ளது. கணிசமான தொழில் முனைவோர் தொழிலை விட்டு  கூலி வேலைக்கும், தள்ளு வண்டி கடை போடுவதற்கும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையை உணர்ந்துதான் செங்கொடி இயக்கம் தொழில் பாதுகாப்பு மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அனுப்பப்படும். “போராட்டத்திற்கு  தயாராவோம்”என்ற எச்சரிக்கையை மத்திய அரசுக்கு உணர்த்தும் மாநாடாக இது இருக்கும். சிஐடியு உங்களோடு இருக்கும். ஒன்றுபடு வோம், வெற்றி பெறுவோம் என்றும் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.