tamilnadu

img

கொல்லப்பட்ட தப்ரிஸ் வல்லுறவுக்கு முயன்றாராம்

ஜாம்ஷெட்பூர்:
பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், 22 வயது முஸ்லிம் இளைஞரான ஷாம்ஸ் தப்ரிஸ், இந்துத்துவா வெறிக்கும்பலால், அண்மையில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஜெய் அனுமான்’ சொல்ல மறுத்துவிட்டார் என்பதற்காகவே, அவரை விடிய விடிய,மின்கம்பத்தில் கட்டிவைத்து அவரைஅடித்துக் கொன்றனர். இது நாடுமுழுவதும் அதிர்ச்சியையும் கண்ட
னத்தையும் உருவாக்கிய நிலையில்-தப்ரிஸ், இருசக்கர வாகனத்தைத் திருட முயன்றதாகவும், அதனா லேயே அவரை அடித்துக் கொன்றதாகவும் இந்துத்துவா கும்பல் பழிபோட்டது.

எனினும், தப்ரிஸ் தாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ-க்களில் அவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ வன்முறை யாளர்கள் மிரட்டுவது அம்பலமானது. அதனடிப்படையிலேயே, ‘ஐ.பி.சி. 302’ மற்றும் ‘295ஏ’ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கும், பதிவு செய்யப் பட்டு, விசாரணை நடைப்பெற்று வருகிறது.இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட தப்ரிஸ், பெண்களை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்ய முற்பட்டதாக இந்து பெண்கள் அமைப்பு என்ற பெயரில் புதிய கதை ஒன்று அவிழ்த்து விடப்பட்டு உள்ளது. பெண்கள் அமைப்பு அளித்துள்ள இந்த புகார் குறித்தும் நாங்கள் விசாரணை நடத்துவோம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

;