tamilnadu

img

உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

வருவாய், பத்திரப்பதிவு  துறைகளின் தவறான பதிவால் அவதிப்படும் பொது மக்கள்

உடுமலை, பிப். 28- உடுமலை வட்டம், கண்ண மநாயக்கனூர் கிராமத்தில் பழைய புல எண் 854 தற்போது 750க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளாக பிரிக் கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த பூர்வீக மஜீத் மற்றும் மதரசா நிர்வாகத் திற்கு நத்தம் புல எண் 1063/14 ல் பள்ளி வாசல் மசூதி பயன்பாட்டிற் காக 25 செண்ட் நிலமும், புல எண் 1049/1 ல் 46.30 செண்ட் நிலமும் சொந்தமாக உள்ளது. இந்நிலை யில் பழைய புல எண் 854ன் படி இப்பகுதியில் உள்ள அனைத்து நிலங்களும் பூர்வீக மஸ்ஜித் – மதரஸாவுக்கு சொந்தம் என்று பத்திர பதிவு துறையில் பதிவு செய்யபட்டு உள்ளது. இதனால் இப்பகுதியில் பல நூறு ஆண்டுக ளாக குடியிருக்கும் பொது மக் கள் தங்களுடைய இடத்தை விற் பனை செய்ய முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், கண்ணம நாயக்கனூர் பொது மக்கள் கடந்த 15.10.2018 ஆம் தேதி அன்று உடுமலை பத்திரப் பதிவு அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர். பின்னர் 24.10.2018 அன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, கோவை மண்டல வக்பு வாரிய ஆய்வாளர் மற்றும் பொது மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் தமிழ்நாடு வக்பு வாரிய அலுவலகத்தில் கண்ணம நாயக்கனூர் கிராமத்தில்  தவறா கப் பதியபட்ட பதிவை நீக்குவது என்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட் டது. இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்று வரை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள வீட்டை விற்பணை செய்ய தடையில்லா சான்றிதழ் பெற முடியாமல் பெருமாள்சாமி- வசந் தாமணி என்பவர்கள் தங்களு டைய இடத்திற்குச் சான்று வழங்க வேண்டிய உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார் உடனடி யாக இப்பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சான்று வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனால் காத்தி ருப்பு போராட்டம் முடிவுக்கு வந் தது. இது குறித்து போராட்டம் நடத்தியவர்களிடம் கேட்ட போது வருவாய்த்துறை மற்றும் பத்திரப்பதிவு துறையின் தவறான நடவடிக்கையால் தங்களுடைய நிலத்தின் உரிமையைப் பெற வருவாய் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டிய நிலை ஏற் படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஊர் மக் களை திரட்டி அடுத்த வாரம் மீண்டும் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்  என்றனர்.  இப்போராட்டத்தில் விவசாய சங்கத்தின் செல்வராஜ், சுந்தர சாமி, கண்ணமநாயக்கனூர் ஊர் கவுண்டர் காளியப்பன், லோகேஷ் வரன், திருமலைசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.