உதகையில் தொடர் தர்ணா- சிபிஎம் ஆதரவு
உதகை,மார்ச் 6- உதகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி நடை பெற்று வரும் போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் வாழ்த்திப் பேசினர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும் பபெற வலியுறுத்தி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சி யாக நீலகிரி மாவட்டம் , உதகையில் பெரிய பள்ளிவாசல் முன்பு மக்கள் ஒன் றாக திரண்டு அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 9 வது நாளாக தொடர்ந்து நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செய லாளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எல்.சங்கரலிங்கம், சி.வினோத் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இந்த போராட்டத்தில் குழந்தை கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.