tamilnadu

img

நந்தா தேவி மலைச்சிகரத்தில் பலியான வீரர்களின் உடல்களை மீட்கும் பணியில் சிக்கல்

ராஞ்சி:
நந்தா தேவி மலைச்சிகரத்தில் பலியான மலையேற்ற வீரர்களின் உடல்களை மீட்கும் பணிகள் புதனன்று காலை துவங்கிய நிலையில், காலநிலை காரணமாக மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உத்தர்கண்ட் மாநிலம் பித்தோரகர் மாவட்டத்திலுள்ள நந்தா தேவி மலைச்சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு வீரர்கள் 8 பேர் மாயமானதை தொடர்ந்து, பனியில் உறைந்து உயிரிழந்த 5 வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மீதமுள்ளவர்களின் நிலை குறித்து இன்னும் கண்டறியப்படாத நிலையில், இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் புதனன்று காலை தொடங்கின. இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்கள், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.இதனிடையே காலநிலை காரணமாக உடல்களை மீட்கும் பணிகள் தொய்வடைந்துள்ளதாகவும், முதற்கட்ட மீட்பு பணிகளில்இதுவரை உடல்கள் எதுவும் மீட்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.