tamilnadu

img

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச்செல்லப்பட்ட கர்ப்பிணி


ஜார்கண்ட் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதால் கர்ப்பிணி பெண் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட அவலம் அரங்கேறி உள்ளது. 
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜடாக் கிராமத்தை சேர்ந்த சாந்தி தேவி(30) என்ற பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டது.இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது. இதற்கிடையே சாந்திதேவி வலியின் பாதிப்பால் மயங்கிய நிலைக்கு சென்று விட்டார். 
இதையடுத்து அவரது குடும்பத்தினர் சாந்திதேவியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் சாந்தி தேவி வசித்து வந்த ஜடாக் கிராமத்தை அந்த தொகுதி எம்பி மாதிரி கிராமமாக தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.