tamilnadu

img

கொரோனாவால் சிக்கலை சந்திக்கும் அகமதாபாத் பட்டாசு தொழிற்சாலைகள் 

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கொரோனா காரணத்தால் குஜராத் அகமதாபாத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலைகள் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதனால், பட்டாசு தொழிற்சாலைகளை மூட திட்டமிட்டுள்ளனர்

பட்டாசு விற்பனை என்பது திருவிழா அல்லது பண்டிகை நாட்களில் மட்டுமேயாகும். இருப்பினும், தற்போது பணியாளர்களின் தேவைகள் குறைந்ததால் மற்ற நாட்களில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். கொரோனா காரணத்தால் அவர்களுக்கு வேலை என்பது உத்திரவாதம் இல்லாமல் உள்ளது. ஒரு தொழிற்சாலையில் சுமார் 25 முதல் 30 தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், தற்போது 12 தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆனாலும், எந்த ஆடர்களும் (முன்பதிவு) இல்லாததால் அவர்களுக்கும் வேலை இல்லை.

பட்டாசு தொழிற்சாலைகளில் ஜூன் மாதத்தில் உற்பத்தியை தொடங்கி தீபாவளி வரை பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் ஜின் மாதத்தில் வேலையை தொடங்கினார்கள். ஆனால், மக்கள் பட்டாசுகளை வாங்க விரும்பவில்லை. சமீபத்தில் நடந்த விழாக்களில் கூட சரியான விற்பனை இல்லை. இதனால், உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளனர். கொரோனா காரணத்தால் தான் இந்த பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5 நாட்களுக்குள் தொழிற்சாலைகளை மூடுவதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.