சாளரத்தின் 50 ஆவது சிறப்பிதழ் வெளியீடு'
சேலம், மே 9-
தமுஎகச சார்பில் வெளியிடப்படும், சாளரம் என்ற இதழின் 50 ஆவது சிறப்பிதழ் வெளியீட்டு விழா வெள்ளியன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் சேலம் மாவட்டக்குழு சார்பில் சாளரம் என்ற இதழ் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. கல்வி, இலக்கியம், பண்பாடு, முற்போக்கு சிந்தனைகள் உள்ளடக்கிய இந்த புத்தகத்தின் 50 ஆவது சிறப்பிதழ் வெளியீட்டு விழா வெள்ளியன்று நடைபெற்றது. சேலம் சுனில் மைத்ரா அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தமுஎகச மாவட்டத் தலைவர் மேட்டூர் வசந்தி தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் சா.சோபனா வரவேற்றார். பாலர் சங்கத்தின் சார்பில் குழந்தைகள் பங்கேற்ற ஒயிலாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மகேந்திரா கல்வி குழுமத்தின் செயல் இயக்குநர் ரா.சாம்சன் ரவீந்திரன் சிறப்பிதழை வெளியிட, கவிஞர் செண்பகராமன் பெற்றுக் கொண்டார். சாளரம் புத்தகம் கடந்து வந்த பாதை குறித்து எழுத்தாளரும், இதழின் ஆசிரியருமான இலா.வின்சென்ட் உரையாற்றினார். இந்நிகழ்வில், சேலம் வரலாற்று சங்க நிர்வாகி ஜே.பர்னபாஸ், சேலம் தமிழ்மன்றம் நிர்வாகி வ.முத்து மாரியப்பன், தமுஎகச மாவட்டச் செயலாளர் கண்ணன், துணைச்செயலாளர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டக்குழு உறுப்பினர் கார்த்தி டாவின்சி நன்றி கூறினார்.