நீர், மோர் பந்தல் திறப்பு
நாமக்கல், ஏப்.25- கோடை வெயில் சுட்டெ ரித்து வரும் நிலையில், எலச் சிபாளையத்தில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வியாழ னன்று நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. திமுக ஒன்றியச் செயலாளர் தங்கவேல் தலைமை வகித் தார். மாவட்டப் பொறுப்பா ளர் கே.எஸ்.மூர்த்தி திறந்து வைத்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சுரேஷ், திமுக மாவட்ட பிரதிநிதி துரைசாமி ஆகி யோர் பங்கேற்றனர்.
நீரில் மூழ்கி மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
பொள்ளாச்சி, ஏப்.25– பொள்ளாச்சி அருகே உள்ள சுற் றுலாத் தலமான ஆழியார் அணையில், சென்னை தனியார் பிசியோதெரபி கல் லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம் பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியில் நான் காம் ஆண்டு பயிலும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள், வெள்ளியன்று ஆழியார் அணைப் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ள னர். அணையின் அழகை ரசித்த பின் னர், மாணவர்கள் சிலர் அணையில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு மாணவர் நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற மற்ற மாணவர்கள் அடுத்த டுத்து நீரில் மூழ்கியதாக கூறப்படுகி றது. இந்த விபத்தில் தருண், ரேவந்த் மற் றும் ஆண்டோ ஜெனிப் ஆகிய மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் கரை திரும்பாத தால், அதிர்ச்சியடைந்த சக மாணவர் கள் உடனடியாக ஆழியார் காவல் நிலை யத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆழியார் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர் கள், மாயமான மாணவர்களை தீவிர மாக தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, மூன்று மாண வர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. உயிரிழந்த மாணவர்களின் உடல் கள் பிரேத பரிசோதனைக்காக பொள் ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த துயர சம்பவம் குறித்து ஆழியார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா வந்த இடத் தில் மூன்று இளம் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.