tamilnadu

img

வைரஸ் தொற்று எதிரொலி - கோவையில் பத்திரிகையாளர்களுக்கு  சோதனை

கோவை , ஏப்.21-
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மும்பையில்   ஊடகத்துறையில் பணியாற்றிய 54 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.இதனை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர்.இதேபோல் சென்னையில் ஊடகத்துறையில்  பணியாற்றிய 4 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் கிடைக்க பெற்று உள்ள நிலையில் கோவை 
மாவட்ட நிர்வாகம்,கோவை மாவட்ட சுகாதார துறை, மக்கள் தொடர்பு துறை இணைந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு ரத்த மாதிரி சோதனை எடுக்கபட்டு ரேபிட் டெஸ்டிங் கிட் மூலம் சோதனை செய்யப்பட்டது. சுமார் 200கும் மேற்பட்டவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கபட்டு வருகிறது.சுகாதார துறை இனை இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையில் மருத்துவர் ஜோ டேனியல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் 
செவிலியர்கள் பரிசோதனையை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி,வருவாய் அலுவலர் இராமதுரை முருகன் உள்ளிட்டோர் பரிசோதனை செய்யபடுவதை ஆய்வு மேற்கொண்டனர்.