விஜயா பதிப்பகத்தின் ஜெயகாந்தன் விருது எழுத்தாளர் மு.குலசேகரன் தேர்வு
கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் சார்பில் எழுத்தாளர் மு. குலசேகரன், ஜெயகாந்தன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, கோவை விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் மு.வேலாயு தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் சார்பில் ஜெயகாந்தன், மீரா, புதுமைப்பித்தன் ஆகிய எழுத்தா ளுமைகளின் பெயர்களால் எழுத்தாளர் களுக்கு விருதும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சிறந்த விற்பனையாளர்களுக்கு வானதி விருதும், சிறந்த நூலகருக்கு சக்தி வை.கோ.விருதும் வழங்கப்படுகிறது. 2025 -ஆம் ஆண்டுக்கான விஜயா வாச கர் வட்ட விருதுக்கான எழுத்தாளர் களை தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள் ளது. அதன்படி, ஜெயகாந்தன் விரு துக்கு எழுத்தாளர் மு.குலசேகரன்( வாணியம்பாடி), புதுமைப்பித்தன் விரு துக்கு எழுத்தாளர் குமாரநந்தன்( நாமக் கல்), மீரா விருதுக்கு கவிஞர் மதார் (திரு நெல்வேலி) ஆகியோர் தேர்வு செய் யப்பட்டுள்ளனர். சிறந்த புத்தக விற் பனையாளருக்கான வானதி விருது, தென்காசி வீரசிவாஜி புத்தக உலகம் ஏ.சுகுமாருக்கும், சிறந்த நூலகருக் கான சக்தி வை.கோ விருது, செங் கோட்டை முழுநேர அரசு நூலகத்தின் மூன்றாம் நிலை நூலகர் கோ.ராம சாமிக்கும் வழங்கப்பட உள்ளது. ஜெய காந்தன் விருதுக்கு ரூ.1 லட்சமும், மீரா, புதுமைப்பித்தன், வானதி, சக்தி வை.கோ விருதுகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும், கோவை தொழிலதிபர் பி.எல்.சுப்ரமணியன் வழங்கும் சிறந்த வாசகர்களுக்கான “அன்பின் பெருமழை அப்பச்சி பழனி யப்பர் நல் வாசகர் விருது” மூவருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட உள் ளது. 10 ஆவது ஆண்டாக நடைபெற உள்ள விஜயா வாசகர் வட்ட விருது கள் வழங்கும் விழா, உலகப் புத்தக தின மான ஏப்ரல் 27}ஆம் தேதி, காலை பேரூர் தமிழ்க் கல்லூரி வளாகத்தில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் நடை பெற உள்ளது.