tamilnadu

img

தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தென்னையில் வெள்ளை ஈக் களை கட்டுப்படுத்த புதிய மருந்து களை கண்டுபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.  தமிழ்நாடு தென்னை விவசாயி கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் வெள்ளியன்று கோவை, ஒத்தக் கால் மண்டபத்தில் உள்ள தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஏ.விஜய முரு கன், பொருளாளர் பி.நாகேந்திரன், மாநில துணைத்தலைவர் ஏ.காளப் பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதில், வெள்ளை ஈக்களை கட் டுப்படுத்த புதிய மருந்துகளை  கண்டுபிடிக்க வேண்டும், தென்னை பயிர் செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை செயல் படுத்த வேண்டும், தென்னை சாகு படி முறையில் மாற்றங்கள் செய்ய  ஆய்வு செய்து அதை அமல்படுத்த வேண்டும். ஒரு தனி தென்னை மரம் பட்டு போனாலும் பயிர் காப் பீடு கிடைக்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரி யத்தின் செயல்பாடுகளை கண்டித் தும், மாநில அரசின் தோட்டக்க லைத் துறை மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆகி யவற்றின் செயல்பாடுகள் திருப்தி கரமானதாக இல்லை என மாநிலக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட் டது. மேலும், வெள்ளை ஈக்கள் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண் டும், தென்னை மரங்களுக்கு உர மானியம் தமிழக அரசு வழங்க வேண்டும், அனைத்து தென்னை மரங்களுக்கும் இன்சூரன்ஸ் திட் டம் அமல்படுத்த வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இக்கூட்டத்தில், சங்கத் தின் கோவை மாவட்டச் செயலா ளர் ஸ்டாலின் பழனிசாமி, மாவட் டத் தலைவர் ஜி.ராஜன் உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங் கேற்றனர்.

குடியிருப்பு பகுதியில் புகுந்த கழிவுநீர்: பொதுமக்கள் மறியல்

திருச்செங்கோடு நகராட்சிக்குட் பட்ட குடியிருப்பு பகுதியில், மழைநீரு டன் கழிவுநீரும் புகுந்தததால், அப் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு மலை சார்ந்த பகுதியாகும். நக ரில் மேடான பகுதிகளிலிருந்து வெளி யேறும் மழைநீருடன், குடியிருப்புக ளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலந்து தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடு கின்றன. இப்பிரச்னையை போக்க திருச் செங்கோடு நகராட்சி நிர்வாகம் சார்பில், மேட்டுப்பகுதியான மாங்குட்டை பாளையத்திலிருந்து சண்முகபுரம், தொண்டிகரடு வழியாக சமதள பகுதி யான சூரியம்பாளையம் வரை மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 3 மாத மாக பணி நடைபெற்று வரும் நிலை யில், சில இடங்களில் பணிகள் முடிவுற் றுள்ளன. இந்நிலையில், புதனன்று  பெய்த கனமழையால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சூரியம்பாளை யத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் சூரியம்பாளையத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால் என்ற பெயரில் கழிவுநீர் வாய்க்கால் அமைப் பதாகவும், இப்பகுதியில் வாய்க்கால் அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக் கப்படும், எனக்கூறி ஆனங்கூர் சாலை யில் அமர்ந்து வியாழனன்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன், நக ராட்சி பொறியாளர் சரவணன் ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தினர். திருச் செங்கோடு காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், நகராட்சி ஆணையர் அருள் ஆகியோரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பிரச்னையை மாவட்ட ஆட்சியர் கவ னத்துக்குக் கொண்டு சென்று விவா தித்து முடிவெடுப்பதாக ஆணையர் அருள் கூறினார். இதையேற்று பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென் றனர்.

அனுமதியின்றி மதுபானம் விற்பனை - மறியல்

அனுமதியில்லாமல் மது விற்பனை செய்பவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியில் அனுமதியில்லா மல் விற்கப்பட்ட மதுபானங்களை அருந்திய ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அதிகாலை 5 மணி முதல் அப்பகுதியில் அடையா ளம் தெரியாத நபர்கள் மதுபானங்களை விற்பனை செய்வ தாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, கிடையூர் மேட்டூர், கிழக்கு வளவு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கிடையூர் பேருந்து நிறுத்தம் அருகே  புதனன்று சாலை மறியிலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவ லறிந்து வந்த சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், உதவி காவல் ஆய்வாளர் கண்ணன், சங்ககிரி உட்கோட்ட கலால் அலுவலர் வல்லமுனியப்பன் ஆகியோர் மறியலில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதைய டுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.