tamilnadu

img

அங்கன்வாடி திட்டத்தில் சிக்கலை ஏற்படுத்தும் ஒன்றிய அரசு திருப்பூரில் ஆயிரம் பணியாளர்கள் போராட்டம்

அங்கன்வாடி திட்டத்தில் சிக்கலை ஏற்படுத்தும் ஒன்றிய அரசு
திருப்பூரில் ஆயிரம் பணியாளர்கள் போராட்டம்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் (அங்கன்வாடி) ஒன்றிய அரசு பல்வேறு சிக்கல் நிறைந்த வழிமுறைகளை பின்பற்ற நிர்பந்திப்பதை கைவிட்டு, இத்திட் டத்தை வழக்கம் போல் செயல்படுத்த  வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி  ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத் தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி னர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று இந்த போராட்டம் நடைபெற்றது. அங்கன்வாடி ஊழியர் மற்றும் உத வியாளர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் டி.சித்ரா தலைமையில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங் கேற்று கண்டனம் முழங்கினர். தமிழகத்தில் அங்கன்வாடி திட் டம் மற்ற மாநிலங்களை விட சிறப் பாக செயல்பட்டுக் கொண்டிருக்கி றது. இந்நிலையில், இத்திட்டத்தை சிறப்பாக மாற்றுகிறோம் என்று  ஒன்றிய அரசு பல்வேறு சாத்தியமில் லாத நடைமுறை சிக்கல் நிறைந்த வழி முறைகளை பின்பற்ற நிர்பந்திக்கி றது. தமிழக அரசும், ஒன்றிய அரசு கொண்டுவரும் வழிமுறைகளை பின் பற்ற ஊழியர்களை நிர்பந்திக்கிறது. 20 முதல் 30 சதவீதம் வரை காலிப்ப ணியிடங்கள் நிரப்பபடாமல் உள் ளன. எனவே இத்திட்டம் சிறப்பாக செயல்பட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 1993  மேற்பார்வையாளர் பதவி உயர்வை  வழங்க வேண்டும், சமூக நலத்துறை யில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இத்திட்டத்தில் நடைமுறை சாத்திய மற்ற வழிமுறையான கர்ப்பிணிக ளுக்கு முக பாவனை பதிவு செய்து டி எச்ஆர் வழங்க வேண்டும் என்ற முறையை கைவிட வேண்டும். ஏற் றுக்கொண்டபடி மே மாதம் விடு முறை ஒரு மாதம் வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்தை சிஐடியு  மாவட்டத் தலைவர் ஜி.சம்பத்,  துணைத் தலைவர் கே.உண்ணிகி ருஷ்ணன், சிஐடியு உழைக்கும் பெண் கன்வீனர் கே.எல்லம்மாள், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சி.சித்ரா தேவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  மாவட்டச் செயலாளர் கே.சித்ரா கோரிக்கைகளை விளக்கி பேசி னார். மாநில நிர்வாகி ஆர்.அனிதா சிறப்புரையாற்றினார். முடிவில் மாவட்டப் பொருளாளர் கே.பேபி நன்று கூறினார்.