tamilnadu

img

துளிர் திறனறிதல் தேர்வு முடிவுகள் வெளியீடு

துளிர் திறனறிதல் தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட துளிர் திறனறிதல் தேர்வு முடிவுகள் செவ்வாயன்று உத கையில் வெளியிடப்பட்டன. கூடலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சோ. சுபாஷினி தேர்வு முடிவுகளை அதிகாரப் பூர்வமாக வெளியிட்டார். கடந்த டிசம்பர் 7, 2024 மற்றும் ஜனவரி 29, 2025 ஆகிய தேதிகளில் துளிர் திறனறிதல் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 53 பள்ளிகளைச் சேர்ந்த 1462 மாணவர்கள் ஆர்வத்துடன் பங் கேற்றனர். நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் துவக்க நிலையி லும், ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் இளநிலைப் பிரிவிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாண வர்கள் சீனியர் பிரிவிலும், பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாண வர்கள் சூப்பர் சீனியர் பிரிவிலும் தேர்வு  எழுதினர். தேர்வு முடிவு வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் வே.மகேஸ்வரன், மாவட்ட தலைவர் சி. சங்கர், மாவட்ட துளிர் ஒருங்கிணைப்பா ளர் செந்தில்குமாரி, மாவட்டச் செய லாளர் மணிவாசகம், மாவட்ட சமம் ஒருங்கிணைப்பாளர் கவிதா, மைக்ரோ  லேண்ட் பவுண்டேஷன் ஒருங்கிணைப் பாளர் சபரீசன் மற்றும் கல்லூரி பேராசி ரியர்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர். தேர்வு எழுதிய அனைத்து மாண வர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. மேலும், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் அறிவியல் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். NMMS, TRUST, NTSE போன்ற போட் டித் தேர்வுகளை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் துளிர் திறன றிதல் தேர்வின் கேள்விகள் அமைக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் நீலகிரி மாவட்டத் தைச் சேர்ந்த அதிகமான மாணவர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன டைய வேண்டும் என்று தமிழ்நாடு அறி வியல் இயக்கம் மாவட்ட கிளை வேண்டு கோள் விடுத்துள்ளது.