காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி டிஆர்இயு ஆர்ப்பாட்டம்
சேலம், மே 19- ரயில்வேயில் உள்ள 3 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், என வலியுறுத்தி டிஆர்இயு-வினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் நலச்சட்டங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதக மாக திருத்தக்கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். ரயில் வேயில் உள்ள 3 லட்சம் காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும். என்பிஎஸ், யுபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். 8 ஆவது ஊதியக் குழுவை உடனே அமைக்க வேண்டும். இடமாற்றம் கேட்டுள்ள தொழிலாளர் களை அனுப்ப சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எஞ்சின் டிராபிக் பிரிவுக ளில் ஈஐ ரோஸ்டரை நீக்கிவிட வேண் டும். 8 மணி நேர ரோஸ்டரை அமல் படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) – சிஐடியுவினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் ரயில்வே கோட்ட மேலா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் உதவி கோட்டச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் கே.பீஜூ, ஓட்டுநர் சங்க செயலாளர் அருண்குமார், நிர் வாகி முருகேசன், பென்சன்தாரர் சங்க நிர்வாகி எஸ்.சாம்பசிவன், பொருளா ளர் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.