tamilnadu

img

வனப்பணியாளர்களுக்கு யானைகளை விவரப்படுத்துதல் குறித்து பயிற்சி

வனப்பணியாளர்களுக்கு யானைகளை விவரப்படுத்துதல் குறித்து பயிற்சி

கோவை, மே 15- வன உயிர் பயிற்சியகத்தில் யானைகளை விவரப்படுத்துதல் குறித்தான பயிற்சி வியாழனன்று வன சரகர்கள், வனகாப்பாளர்கள் வனப்பணியாளர்களுக்கு வழங் கப்பட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயிர்பயிற்சியகத்தில் யானை களை விவரப்படுத்துதல் குறித் தான பயிற்சி வியாழனன்று வன சர கர்கள், வனக்காப்பாளர்கள், வனப் பணியாளர்களுக்கு வழங்கப்பட் டது. தமிழ்நாடு வனத்துறை கோவை கோட்டம் சார்பில் நடைபெற்ற இந்த  பயிற்சி கூட்டத்தில் யானைகளின் உடல் அங்கங்களை வைத்து அவற்றிற்கு அடையாளம்(ID) வைப்பது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் வெங் கடேஷ், கோவை மாவட்ட வன அலு வலர் ஜெயராஜ் உட்பட பல்வேறு வனத்துறை அதிகாரிகள் பங் கேற்று விவரித்தனர். மேலும் அவர் களது வனத்துறை அனுபவங்களை யும் பகிர்ந்து கொண்டனர். யானை -  மனித மோதலை தடுப்பது எப்படி? அங்குள்ள மக்களிடம் யானைக ளின் சுபாவம் என்ன என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், யானைகளை பிடிக்க வலியுறுத்தி  பொதுமக்கள் போராடும் பொழுது எவ்வாறு கட்டுப்படுத்துவது என் பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக இந்த பயிற்சி கூட்டத் தில் யானைகளுக்கு பெயர்கள் வைப்பதை காட்டிலும் ID வைப்ப தன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் கால நிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்ட இயக்கு நர் அன்சர்தீன், கூடலூர், தி ஷோலா டிரஸ்ட் நிறுவனத்தின் அறங்காவ லர் டாக்டர் தர்ஷ் தேகேகரா, உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) டி.பூமிநாதன் மற்றும் இலங்கை, திஸ்ஸமஹாராமாவில் உள்ள பாது காப்பு மற்றும் ஆராய்ச்சி மையத் தின் ஆராய்ச்சியாளர் ஸ்ரீதர் விஜய கிருஷ்ணன், வனவிலங்கு மருத் துவ அதிகாரி என்.எஸ்.மனோ கரன், ஓசை அமைப்பின் நிறுவனர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.