tamilnadu

img

தனியார் கல்லூரியில் வர்த்தகத் திருவிழா

குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரியில், மாபெரும் வர்த்தகத் திருவிழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் செயல்பட்டு  வரும் எக்ஸல் பொறியியல் கல்லூரி வளாகத்தில், மாபெரும்  வர்த்தகத் திருவிழா ஞாயிறன்று தொடங்கியது. மாணவர்களி டையே வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர் கள் தங்கள் தனித்திறமையை மேம்படுத்திக் கொள்ளும் வகை யிலும் இரு தினங்கள் இந்த வர்த்தகத் திருவிழா நடை பெறவுள்ளது. இவ்விழாவினை கல்லூரியின் தலைவர் நடே சன், துணைத்தலைவர் மதன் கார்த்திக் ஆகியோர் தொடங்கி  வைத்து, அரங்குகளை திறந்து வைத்தனர். 150க்கும் மேற்பட்ட  வர்த்தகக் கடைகளுடன் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் வகையாக, இருசக்கர வாகனப் பொருட்கள், இயற்கை தானி யங்கள், உணவுப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், வீட்டு  உபயோக பொருட்கள் உள்ளிட்ட சிறு, சிறு வணிக நிறுவனங் கள் கலந்துகொண்டு, கடைகளை அமைத்து பொருட்களை விநியோகித்தனர். இந்நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், கண்கவர் நட னம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பவானி, குமார பாளையம், சங்ககிரி, வெப்படை போன்ற பகுதிகளிலிருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, வர்த்தகத் திரு விழாவினை கண்டுகளித்தனர்.