கடந்த ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சாஃப்ட்வேர் பிரச்னைகளால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 10 நாட்களில் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
மாணவர்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றும், மறு தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.