தையல் கலைஞர்கள் சம்மேளன மாநில மாநாடு புதுக்கோட்டையில் ஆக.12,13 தேதிகளில் நடத்த முடிவு
வேலூர், மே 14 - தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளத்தின் மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிக ளில் புதுக்கோட்டையில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம் மேளன (சிஐடியு) மாநில நிர்வாகிகள் கூட்டம் சம்மேளனத் தலைவர் சுந்தரம் தலைமையில் வேலூரில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட தையல் தொழிலாளர் கள் சங்க மாவட்டச் செயலாளர் செவ்வி வரவேற்றார். சிஐடியு வேலூர்-திருப் பத்தூர் மாவட்டச் செயலாளர் எஸ்.பரசு ராமன் கூட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் மற் றும் பலர் பங்கேற்றனர்.எதிர்கால பணி கள் குறித்து மாநில பொதுச் செயலா ளர் எம்.ஐடா ஹெலன் உரையாற்றி னார். இக்கூட்டத்தில், மே 20 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் - மறியல் போராட்டத் தில் தையல் தொழிலாளர்கள் பெருந்தி ரளாக பங்கேற்பது, மாநகராட்சி நிர்வா கங்கள் தையல் கடைகளுக்கு தொழில் வரி வசூலிப்பதை கைவிட வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவசப் பள்ளி சீருடை தைக்கும் தையல் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு கூலியை உடனடியாக வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.