tamilnadu

img

வேலை நிறுத்தம்: சுமைப்பணியாளர்கள் பிரச்சாரம்

வேலை நிறுத்தம்: சுமைப்பணியாளர்கள் பிரச்சாரம்

ஈரோடு, ஜூன் 27- ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து வரும் ஜுலை 9ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத் தத்தை விளக்கி ஈரோடு மாவட்ட சுமைப் பணியாளர் சங்கத்தினர் ஈரோடு மாநக ரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு 44 தொழிலாளர் நல  சட்டங்களை 4 தொகுதிகளாக மாற்றி  தொழிலாளர் உரிமையைப் பறித்ததை  எதிர்த்தும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண் டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜுலை 9ஆம் தேதி அகில இந்திய பொது வேலைநிறுத்தத் திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இதனை விளக்கி ஈரோடு மாநகரில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு சங்க தலை வர் டி.தங்கவேலு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ர மணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம், சுமைப் பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலா ளர் எம்.அர்த்தநாரி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுந்தரரா ஜன் வாழ்த்தி பேசினார். சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தி னரின் பிரச்சார இயக்கம், பவானி ரோடு  நெரிகல்மேடு பகுதியில் தொடங்கிய பிரச்சாரம் சத்தி ரோடு, பார்க் ரோடு, குப்பக்காடு, டிவிஎஸ்மேடு, ஈஸ்வரன் கோவில் வீதி, தெப்பக்குளம் வீதி, சேட் காலனி, பெரியவலசு மற்றும் நல்லி  தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் நடைபெற்றது.