உடுமலை அமராவதி ஆற்றுப்படுகையில் கேட்பாரற்று கிடக்கும் மகாவீரர் சிலை - வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தகவல்
திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி ஆற்றுப்படுகையில் கேட் பாரற்று கிடக்கும் மகாவீரர் சிலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ள னர். உடுமலை வரலாற்று ஆய்வு நடு வத்தினர் அமராவதி ஆற்றின் கரை யோரங்களில் “நதிக்கரை நாகரிகம்” இருந்தமைக்கான சான்றாக கல் வெட்டுச் சான்றுகளையும், தொல்லி யல் சின்னங்களையும் தேடி ஆவ ணப்படுத்தி வருகின்றனர். உடு மலை, மடத்துக்குளம் பகுதி பழங் காலத்தில் சமணர்கள் வசித்த பகுதி என்பதற்கு கல்வெட்டுச் சான்றுக ளும், தொல்லியல் சான்றுகளும் உள் ளன. திருமூர்த்தி மலையில் இருக்கும் மகாவீரர் சிலையும், ஐவர் மலையில் 16 தீர்த்தங்கரர் சிலைகளையும், சம ணப் படுக்கைகள் இருந்ததையும் உடுமலை வரலாற்று ஆய்வு நடு வத்தினர் ஆய்வு செய்து ஆவணப் படுத்தி வருகின்றனர். மடத்துக்குளத்தின் அமராவதி ஆற்றின் கரையோரத்தில் மகாவீரர் சிலை ஒன்று கேட்பாரற்று கிடப்ப தாக வரலாற்று ஆய்வு நடுவத்தின ருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதனடிப்படையில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. இந்த மகாவீரர் சிலை கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த இடத்திலிருந்து அயிரை எனும் ஐவர்மலை சுமார் 8 கி.மீ இடைவெளி யில் உள்ளது. இங்கு சமணர்கள் வசித்தமைக்கான கல்வெட்டுச் சான்றுகளும், கல்வெட்டுப் படுக்கை களும் ஏற்கனவே தமிழக அரசின் தொல்லியல் துறையால் ஆவணப் படுத்தப்பட்டு பாதுகாக்கப்படு கின்றன. இந்த சிலை இருக்கும் இடத் திற்கு மிக அருகில் சாமிநாதபுரம் எனும் ஊர்ப்பெயரும் உள்ளது. சாமி நாதபுரம் என்பதில் நாதர் என்பது தீர்த்தங்கரர்களில் பார்சுவநாதரைக் குறிப்பதாகும். 8 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் ஆட்சிக்காலத்தில் சமண சமயத்தாருக்கு நிலங்கள் கொடுத் தமைக்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. உடுமலை பகுதியில் ஆதாழியம்மன் கோவில், திரு மூர்த்தி மலை கோவில், ஐவர் மலை போன்ற இடங்கள் சமணர்கள் வாழ்ந் தமைக்கான உறுதியான சான்றுக ளாக இருக்கும்போது, இந்தக் கற்சிற்பத்தையும் இந்தச் சான்று களுடன் இணைத்துக்கொள்ளலாம். இது நான்கடி உயரத்தில், மூன்று வெண்கொற்றக்குடைகள் மேலி ருந்து இரண்டு பெண்மணிகள் வெண் சாமரம் வீசுவது போன்று சிற்பங்க ளும், மகாவீரர் அமர்ந்த நிலையி லும், அவருக்கு கீழே மூன்று சிங்கங் களும் சிற்பமாக வடிக்கப்பட்டுள் ளது. முள்வேலிகளில் கேட்பாரற்றுக் கிடப்பதால், சிதிலமடைந்து உரு வமே இல்லாமல் இருக்கிறது. தமிழக அரசின் தொல்லியல் துறையில் இத னைப் பாதுகாத்தால், அடுத்து வரும் தலைமுறையினருக்கு நம் தொன் மையான வரலாற்றினையும், பண் பாட்டினையும் இந்தக் கற்சிற்பத்தின் வழி அறிய வாய்ப்பிருக்கிறது, என உடுமலை வரலாற்று ஆய்வு நடு வத்தினர் தெரிவித்துள்ளனர்.