ஈரோட்டில் மே 9இல் சிறப்பு கருத்தரங்கம்
ஈரோடு, மே 7- இரண்டாம் உலகப் போரில் சோவியத் செஞ்சேனை பாசி சத்தை வீழ்த்திய 80ஆவது ஆண்டு நினைவு தினக் கருத்த ரங்கம் ஈரோட்டில் மே 9ஆம் தேதி (நாளை) நடைபெற உள் ளது. மாமேதை கார்ல் மார்க்ஸின் 207ஆவது பிறந்த நாள் மற் றும் இரண்டாம் உலகப் போரில் சோவியத் செஞ்சேனை யால் பாசிசம் வீழ்த்தப்பட்ட 80ஆவது ஆண்டு நினைவு நாள் ஆகியவற்றை முன்னிட்டு இந்த சிறப்புக் கருத்தரங்கம் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள இக்கருத்தரங்கிற்கான ஆலோச னைக் கூட்டம் சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ஈரோடு பெரியார் மன்றத்தில் வெள்ளிக்கிழமை (மே 9) நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இக்கருத்தரங் கிற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமை வகிக் கிறார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் சிறப்புரை யாற்றுகிறார். முன்னதாக, இடதுசாரி, ஜனநாயக முற்போக்கு கட்சிகள் மற்றும் அமைப்புகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத் திற்கு, சிபிஎம் மூத்த தோழர் கே.துரைராஜ் தலைமை வகித் தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்ரமணியன், பி.சுந்தரராஜன், நகர செய லாளர் வி.பாண்டியன், மூத்த தோழர் ப.மாரிமுத்து, திமுக சட்ட மன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், சிபிஐ எஸ்.டி.பிரபா கரன், திமுக மாநகர அவைத் தலைவர் இரா.சேகரன், மதிமுக முசிறி.ரவிச்சந்திரன், விசிக தெற்கு மாவட்டச் செயலாளர் வி.கமலநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளர் தாஜ்முகமது கலீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் தொட்டி
தருமபுரி, மே 7- சோமனஹள்ளி கிராமத்தில் காட்சிப்பொருளாக உள்ள குடிநீர் தொட்டியை, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு ஒன்றியம், பி.கொல்ல ஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட சோமனஹள்ளி கிராமத்தில், மினி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி, தண்ணீரின்றி காட்சிப்பொரு ளாக உள்ளது. இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவி லில் திருவிழா இன்னும் சில நாட்களில் நடக்க உள்ளது. ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இடத்தில் குடிநீ ரின்றி காணப்படும், இந்த குடிநீர் தொட்டியை, பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிற்பயிற்சி அலுவலர்கள் தர்ணா
ஈரோடு, மே 7- பணிவரன் முறை, பதவி உயர்வு உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்யப் படவுள்ள ஜெடிஒ பணியிடங்களை, 1:1 என்ற விகிதாச்சாரத்தில் நியமிக்கப்பட வேண்டும் தொகுப்பூதிய பயிற்றுநர்கள் மற்றும் உதவி யாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும். 2005 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பணிமனை உதவியாளர்களின் தொகுப் பூதிய காலத்தை பணிவரன் முறை செய்ய வேண்டும். பதவி உயர்வு மற்றும் காலமுறை இடமாறுதல் கலந்தாய்வு முறையில் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலு வலர் சங்கத்தினர் செவ்வாயன்று மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுப ட்டனர். இதன்ஒருபகுதியாக, ஈரோடு சென்னி மலை சாலையில் ஐடிஐ முன்பு சங்கத்தின் தலைவர் ரா.சுமதி தலைமையில் தர்ணா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு.சீனிவாசன் தர்ணாவைத் தொடங்கி வைத் தார். இதில், சங்கத்தின் செயலாளர் ச.கண் ணன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ரமேஷ், செயலாளர் ச.விஜயமனோ கரன் மற்றும் துறைவாரி சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். முடிவில், பொருளாளர் வீ.சாவித்திரி நன்றி கூறினார். கோவை இதேபோன்று, கோவை மேட்டுப்பாளை யம் சாலையில் ஐடிஐ முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கோவை கிளைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை ஏற்றார். இதில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன், ஐடிஐ சங்க மாநில துணைத் தலைவர் நடராஜன், கிராம சுகாதார செவிலி யர் சங்க மாநில பொதுச் செயலாளர் பிரக லதா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். முடி வில் மூத்த உறுப்பினர் ராமசாமி நன்றி கூறி னார். சேலம் சேலம் கோரிமேடு பகுதியிலுள்ள ஐடிஐ வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சங்கத்தின் கிளைத் தலைவர் ஸ்ரீபதி தலைமை வகித்தார். இதில், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், தொழிற் பயிற்சி அலுவலர் சங்க மாநிலப் பொருளா ளர் திருநாவுக்கரசு, வருவாய்த்துறை அலுவ லர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்த நாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஐடிஐ முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, சங்கத் தின் மாவட்டத் தலைவர் ம.முனிராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சாமிநா தன், பொருளாளர் அன்பழகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.காவேரி ஆகியோர் பங்கேற்றனர்.
தபால்காரர்களுக்கு ஊதிய உயர்வு கோரிக்கை
ஈரோடு, மே 7- தபால்காரர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அகில இந்திய அஞ் சல் மற்றும் ஆர்எம்எஸ் ஓய் வூதியர் சங்கத்தினர் ஈரோடு கோட்ட கண்காணிப்பாள ரிடம் புதனன்று கோரிக்கை மனு அளித்தனர். பென்சன் அதாலத் கூட் டங்களை உரிய இடை வெளியில் நடத்த வேண் டும். குடும்ப ஓய்வூதிய பிரச் சனைகளை காலம் தாழ்த்தா மல் தீர்த்து வைக்க வேண் டும். அஞ்சலக சேமிப்பு கணக் குதாரர்களுக்கு காலாவ தியான ஏடிஎம் கார்டுக ளுக்கு பதில் புதிய கார்டு களை உடனே வழங்க வேண்டும். தபால்காரர்க ளுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மனு அளித்தனர். இவ்வியக்கத்தில், கோட்ட உதவித் தலைவர் எம். விஸ்வநாதன் தலைமையில் செயலாளர் என்.ராமசாமி, பொருளாளர் கே.பழனி வேல் பொருளாளர் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.